கிட்டாதாயின் வெட்டென மற

Thursday, July 19, 2012





பல நாட்களுக்குப் பிறகு என் மடியில் என் கணிணி. இன்று மீண்டும் துவங்குகிறேன் என் வலைப்பயணத்தை..



இன்று ஔவையாரின் ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தன் புத்தகங்களை  படித்துக் கொண்டிருந்தேன். அதில் பல விஷயங்கள் மனதை தொட்டாலும், மனதை தொட்ட விஷயங்களில் மனதை விட்டு நீங்காமல் இருந்தது 
“ கிட்டாதாயின் வெட்டென மற” 

ஒரு பொருள் உனக்கு கிடைக்காது என தீர்மானமாய் தெரிந்த பிறகு அதை மறந்துவிடுவதே நல்லது என்று சொல்லியிருக்கிறார் அவ்வை.

அப்போது என்னவள் தான் எனக்கு நினைவில் வந்தாள். கிடைக்காத, கிடைக்க வாய்ப்பே இல்லாத அவளை எண்ணி வருந்துவது தவறுதான் என்பதை புரிந்துக் கொண்டேன். நாளை முதல் யோகா மற்றும் தியானம் வகுப்பு செல்ல திட்டமிட்டிருக்கேன். நான் பல வருடங்களாக தியானம் செய்து வந்தாலும் இன்னும் என் மனதை ஆற்றிக்கொள்ள, இறைவனை நோக்கி இன்னொரு படி எடுத்துவைக்க இந்த பயிற்சி வகுப்பு பயன்படும் என்பதால் இந்த முடிவை எடுத்தேன்.

இன்னும் சில தினங்களில் என் தியான மற்றும் யோகா வகுப்பின் அனுபவங்களை பதிவு செய்கிறேன்.

உங்களுக்கும் அவ்வை சொன்னதையே நானும் சொல்கிறேன்.

“கிட்டாதாயின் வெட்டென மற”

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: