அகர முதல காதலி

Friday, September 30, 2016


அந்தோ !

ஆறுதல் சொல்ல எவருண்டெனக்கு ?

இருக்கிறாய் நீயென நம்பினேன்

ஈருடல் ஓருயிராய் இருந்தோமே

உன்னால் மட்டும் எப்படி முடிந்தது

ஊனமானேனடி நான்

எங்கே இருக்கிறாயடி, என்

ஏகாந்த பைங்கிளியே

ஐயம் கொள்ளாதே

ஒருமுறை மன்னித்துவிடு

ஓடோடி வந்துவிடு

ஔடதம் தந்தென்னை மீட்டுவிடு..

(பி.கு.: இக்கவியில், ஏகாந்தம் : இரகசியம், ஔடதம் : மருந்து )

* தினேஷ்மாயா *

0 Comments: