வன்கொடுமை

Saturday, February 01, 2014


    பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட அவலநிலையை என்னவென்று சொல்வது. 

    அந்த பெண், பழங்குடியின பெண் என்பதாலும், பண பலம் இல்லாதவள் என்பதாலும் அவளை அந்த ஊரை சேர்ந்த 12 பேர் அவளுடன் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்துவிட்டனர் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுபோன்ற கொடுமைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது நீங்களும் அவர்களை கைது செய்து கைது செய்து உங்கள் சிறைகளை நிரப்பிக்கொள்கின்றனர். 

   ஆனால், என் இந்திய பெண்களுக்கெதிரான இந்த வன்புணர்வு கொடுமைகள் இன்னமும் குறைந்தபாடில்லையே. இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தொலைநோக்குப்பார்வையுடன் சிந்தித்து ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும். முக்கியமாக பெண்களிடத்தில் இதைப்பற்றிய அவர்களின் கருத்தையும் மனநிலையையும் கேட்டறிய வேண்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் எந்த விதமான தண்டனையை தரவிரும்புகின்றனர், அவர்கள் இதனால் சந்திக்கும் இன்னபிற பிரச்சனைகள் என்னென்ன என்று கேட்டறிந்தும், பிற ஆய்வுகள் மேற்கொண்டும் இதற்கான தீர்வை நாம் இந்த சமூகத்திடம் முன் வைக்க வேண்டு..

* தினேஷ்மாயா *

0 Comments: