அன்புள்ள கிறுக்கி

Saturday, February 01, 2014


ஜோ மல்லூரி அவர்கள் எழுதிய புத்தகம். அவர் எழுத்தில் நான் வாங்கிய இரண்டாவது புத்தகம்.

 இந்த புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த வரிகள் சில..

  • காதல் - பேச முடியாமல் ஏங்கும்!
    காமம் - பேசி முடிந்தாலும் ஏங்கும்!
  • அவள் பிறந்தபிறகு
    உலகில் அழகு தீர்ந்துப்போனது என்ற
    எனது கனவுகளில்
    யாரும் கல்லெறிந்து விடாதீர்கள்
  • பிரம்ம வரம்பை மீறிய பிரம்மாண்டமே!
  • முன்பெல்லாம்
    காலையில்
    இயங்குவதற்காகப்
    படிப்பேன்.

    மாலையில்
    மயங்குவதற்காகக்
    குடிப்பேன்.

    இப்போது
    இரண்டையும்
    விட்டுவிட்டேன்.

    அதுதான் - நீ இருக்கிறாயே !
  • அடடா,
    ஐந்தடி உயரத்தில் பூகம்பம்!
  • அன்று -
    கல்லூரி வாழ்க்கையின்
    கடைசி நாள் !
    உனது ஆட்டோஃகிராபில்
    நான் எழுதிய வரிகள் !

    ‘ நீ முந்திப்போனால்
    என் காதருகே வந்து
    சொல்லி விட்டுப் போ !

    நான் முந்திப் போனால்
    என் கல்லறைக்கு ஒருமுறை
    வந்து விட்டுப் போ!’
  • நீ காதலியாக இருந்தால்
    இடைவெளி தேவையில்லை

    நீ தோழியாக இருந்தால்
    இடைவெளி பிரச்சனையில்லை.

  • என்னைக் காதலித்துக்
    கொண்டேயிரு!
    எனக்கு
    மரணம் கூடத் தெரியாது!
காதல் கவிதைகளின் தொகுப்பு. பல இடங்களில் வார்த்தைகளால் விளையாடினாலும், சில இடங்களில் மனதில் வார்த்தைகள் ஏதுமின்றியே கவிதையின் உணர்வை என்னுள் புகுத்திவிடுகிறார்..

* தினேஷ்மாயா *

0 Comments: