மழைப் பேச்சு

Saturday, February 01, 2014


அறிவுமதி அவர்களின் “மழைப் பேச்சு” புத்தகத்தை நான் சென்றவருடமே வாங்கியிருக்கிறேன். ஆனால் அதை படிக்க ஆரம்பிக்கும் முன்னமே நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாய் கொடுக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தை இங்கே கண்காட்சியில் வாங்கினேன்.

அந்த புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த சில கவிதைகள்..


  • முடிந்துவிட்டது
    வா தொடங்கலாம்
  •  இந்த நூல்..
    ஆண் தாய்
    அப்துல் ரகுமானுக்கு... ( சமர்ப்பணம்)
  • மனசை அவிழுங்கள் முதலில்
  • குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம்
    வியர்க்க
  • எத்தனை எத்தனை வேலைகள் இருப்பதாக
    எப்படி எப்படியெல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள்
  • குழந்தைகளாக இருங்கள்
    கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில்
  • உச்சத்தில்
    மீசை முளைத்துப் பார்த்தாய் நீ
    பெண்ணாகிப் போயிருந்தேன் நான்
  • நெற்றி முடியைச்
    சரிசெய்வதாகத்தான் தொடங்குகிறது
    பெரும்பாலும் அது
  • நான் உடுத்திய தனிமையை
    அவிழ்த்துப் போட்டவள் நீ
  • எப்படி நிகழ்ந்தது   காரணம் கேட்காதே
    நிகழ்ந்தது
  • இரண்டாவது சுற்றுக்கான
    இடைவெளியை
    அழகு செய்வதில் இருக்கிறது
    ஆண் பெண் உறவு
  • இரவு முடிந்த விடியலில்
    எப்படித்தான் சந்திக்கிறார்களோ மணமக்கள்
    எல்லோரையும்
  • ஏய் ஏய் காட்டுவாசி
  • அந்த நேரத்திற்கு மட்டும்
    அவசரமாய்த் தேவைப்படுகின்றன
    சில கெட்ட வார்த்தைகள்
  • சொல்ல முடியாத பாராட்டுதல்கள்
    முத்தங்களாகின்றன
  • என்னடா கொடுமையிது
    கசக்கிய தாளில்தான் எழுத வேண்டியிருக்கிறது
    இந்த கவிதையை மட்டும் !

காமத்தை இவ்வளவு அழகாகவும் சொல்லமுடியுமா என்றால் அது அண்ணன் அறிவுமதி அவர்களால் மட்டுமே சொல்ல முடியும்..

* தினேஷ்மாயா *

0 Comments: