சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

Saturday, February 01, 2014


    இந்நூலை வாங்கவேண்டும் என்றுதான் சென்றேன். ஆனால், இதை படிக்க நேரம் ஒதுக்க முடியுமா என்று தோன்றவில்லை அதனால் இந்த புத்தகத்தை வாங்கவில்லை. ஆனால் விரைவில் இதை வாங்கிடுவேன். இந்த புத்தகத்தை கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன். அதில் என் மனதில் பதிந்த ஒரு சில வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதுபோல உணர்ந்தேன். அதை இங்கே பதிகிறேன்..

  ஒரு பொருள் உன்னிடம் இருக்கிறதென்றால், அது உனக்காக கொடுக்கப்பட்டதல்ல. அதை வைத்திருக்க வேறெவரும் இல்லையாதலால் அது உன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரியான ஆள் வரும்போது அது உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

 இதை அவர் இப்படி சொல்லவில்லை எனினும் இந்த பொருளில்தான் சொல்லியிருந்தார். இந்த வரிகளே போது நான் அந்த புத்தகத்தை வாங்க... விரைவில் வாங்கி படித்துவிட்டு பதிகிறேன் என் முழு அனுபவத்தையும்...


* தினேஷ்மாயா *

0 Comments: