இயற்கை மனம்

Monday, July 08, 2013


     பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பார்கள். இது சிவனின் திருவிளையாடல் கதையில் ஒன்று. அதைப்பற்றி பேசி நக்கீரனுக்கு ஏற்பட்ட விளைவுகள் தனிக்கதை. ஆனால் நான் அதைப்பற்றி பேசப்போவதில்லை. 
     சில நாட்களுக்கு முன்னர் வாடிகா தேங்காய் எண்ணெய் வாங்கினேன். இதுவரை உபயோகித்த மற்ற எண்ணெயை விடவும் இதில் மனம் கொஞ்சம் அதிகமாகவே அதுவும் மனதை கவரும்விதமாகவும் இருந்தது. இதை நுகர்ந்தவுடன் என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம், இதுப்போன்ற பொருட்களால்தான் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மனம் இருக்குமோ என்று நக்கீரன் சொன்ன கூற்று நினைவுக்கு வந்தது. சரி மனதில் பட்டத்தை இங்கே பதியலாமே என்று இந்த பக்கம் வந்தேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: