காத்திருப்பு…

Monday, September 12, 2011



பத்து மாதங்கள் என்றாலும்
அன்னைக்கு தலைபிள்ளைக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
டிக்கெட் எடுத்தபின்னர்
தியேட்டரில் நண்பனுக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
பூங்காவில் காதலிக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
அப்பா பட்டாசு வாங்கிவருவார் என்று
தீபாவளி அன்று பிள்ளைகள்
காத்திருப்பதும் சுகம்தான்…
சுதந்திரதின விருந்தினருக்காக
பள்ளியில் பரிசுக்காக பிள்ளைகள்
காத்திருப்பதும் சுகம்தான்…
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்
கரண்ட் போனபின்பு
கரண்ட் வருவதற்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
ஞாயிற்றுகிழமை மதியம்
அம்மா செய்யும் பலகாரத்தை சுவைக்க
காத்திருப்பதும் சுகம்தான்…
I Love You சொல்லிவிட்டு
காதலியின் பதிலுக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
எப்போதுவிடியும் தன் காதலியை
பார்க்கலாம் என்று விடியலுக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
நிச்சயதார்த்தம் முடிந்ததும்
திருமணத்துக்காக மணமக்கள்
காத்திருப்பதும் சுகம்தான்…
திருமணம் முடிந்ததினம்
முதலிரவிற்காக புதுமண தம்பதிகள்
காத்திருப்பதும் சுகம்தான்…
விவசாயி விதை போட்டபின்
வளம்கொழிக்கும் மழைக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
அறுவடை முடித்தபின்
தினக்கூலி பெற
காத்திருப்பதும் சுகம்தான்…
நள்ளிரவு 12:00 புத்தாண்டை
வரவேற்க உலகமே
காத்திருப்பதும் சுகம்தான்…
முதல் படத்தை முடித்துவிட்ட
புதிய இயக்குனர் ரிலீசுக்காக
காத்திருப்பதும் சுகம்தான்…
தேர்வு முடிவிற்காக
பள்ளிக்கூட வாசலில் நண்பர்களுடன்
காத்திருப்பதும் சுகம்தான்…
மனைவியை மருத்துவமனையில்
சேர்த்துவிட்டு அவளின் சுகப்பிரசவத்திற்காக
காத்திருப்பதும் சுகம்தான்…

அவளை நினைத்து எவ்வளவுதான்
கவிதை எழுதினாலும்
அவளை முழுதும்
வர்ணிக்க முடியாமல்
வார்த்தைகாக நான் காத்திருப்பதும் சுகம்தான்…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: