மார்கழியில் குளிச்சுப்பாரு

Wednesday, September 14, 2011




மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..
உப்பில்லாம குடிச்சுப்பாரு
கஞ்சி பழகி போகும்..
பாயில்லாம படுத்துப்பாரு
தூக்கம் பழகி போகும்..
வறுமையோடு இருந்துப்பாரு
வாழ்வு பழகி போகும்..
சந்தோசத்தை வெறுத்துப்பாரு
சாவு பழகி போகும்..
மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..

என்னோட சொத்தெல்லாம்
தொலைச்சுப்புட்டேன்..
இப்போ என் பேரில் உலகத்தையே
எழுதிக்கிட்டேன்..
துறவிக்கு வீடுமனை
ஏதுமில்ல..
ஒரு குருவிக்கு தாசில்தார்
தேவயில்ல..
சில்லென காத்து…
சித்தோட ஊத்து…
பசிச்சா கஞ்சி…
படுத்த ஊறக்கம்..
போதுமடா போதுமடா
போதுமடா சாமி…
நான் சொன்னாக்க
வலயிடமா சுத்துமடா பூமி..
மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..

காசுப்பணம் சந்தோசம்
தருவதில்ல..
வைரக்கல்லுக்கு அரிசியோட
ருசியும்மில்ல..
போதுமெனும் மனசப்போல
செல்வமில்ல..
தன் பொண்டாட்டிப்போலவொரு
தெய்வமில்ல..
வேப்பமர நிழலு…
விசிலடிக்கும் குயிலு…
மாட்டுமணி சத்தம்…
வயசான முத்தம்..
போதுமடா போதுமடா
போதுமடா சாமி..
அட என்னப்போல
சுகமான ஆளிருந்தா காமி..
மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..
உப்பில்லாம குடிச்சுப்பாரு
கஞ்சி பழகி போகும்..
பாயில்லாம படுத்துப்பாரு
தூக்கம் பழகி போகும்..
வறுமையோடு இருந்துப்பாரு
வாழ்வு பழகி போகும்..
சந்தோசத்தை வெறுத்துப்பாரு
சாவு பழகி போகும்..

படம் : ஒன்பது ரூபாய் நோட்டு..

வாழ்க்கையை அருமையாக எடுத்து சொல்லும் பாடல். என்னை அதிகம் சிந்திக்க வைத்த பாடல்.ரொம்பவும் ந்ஆன் நேசித்த பாடல்.

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: