அன்பே அன்பின் அத்தனையும் நீயே

Monday, February 04, 2019




அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும்.....

கடல் சுமந்த.. சிறு படகே ...

அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே...

குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வனமே
சுட்டும் குளிரும் சுடரே மாயமே...

ஏரி நீரில் உன் முகம்தான் விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே
திசைகள் தொலைத்தேனே... அலையில் மிதந்தேனே..
தீவை போல வந்தாய் நின்றாய் நீயே...
கடல் சுமந்த சிறு படகே..

அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே...

ஓஹ்... கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும்தான் 
என் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும்தான்

இடியும் மின்னலும் முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று

நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே
ஓஹ் என் மகளே...
ஓஹ் என் மகளே...
ஓஹ் என் மகளே...
ஓஹ்...

படம்: பேரன்பு
இசை: யுவன்
வரிகள்: சுமதி ராம்
குரல்: கார்த்திக்

* தினேஷ்மாயா *

0 Comments: