நினைவுகள்

Tuesday, January 19, 2016


    நினைவுகள்தாம் நம்மை சுழல செய்கிறது. இன்று என் பள்ளிப்பருவ நண்பன் சுந்தரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் கேட்டான், எப்படிடா அனைத்து நினைவுகளையும் தைரியமாக இங்கே பதிவு செய்கிறாய் என்று..

 இந்த நினைவுகள்தான் இன்று என்னை பக்குவப்படுத்தி ஒரு நல்ல சிந்தனையாளனாய் மாற்றியிருக்கிறது. காதல், நட்பு, தோல்வி, அவமானம், குரோதம், வெற்றி, மகிழ்ச்சி இப்படி பல உணர்வுகள் என்னுள் புதைந்து இருக்கிறது. அவை இல்லாமல் இன்று நான் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது. எனக்கென்று ஒருத்தி வருவாள். அவளிடமும் என் நினைவுகளை பகிர்வேன். நானென்பது என் நினைவுகளையும் அடக்கியதே. என்னை ஏற்றுக்கொள்பவள் என் நினைவுகளை மட்டும் ஏற்காமல் போவாளா என்ன ?

   இந்த பதிவுகளை ஒரு 10 - 15 வருடம் கழித்து படித்துப்பார்க்கும் போது இவையெல்லாம் எனக்கு பொக்கிஷமாய் தெரியும். பலர் இங்கே வருங்காலத்திற்காக பணத்தை சேர்க்க ஓடிக்கொண்டிருக்க, நானோ நினைவுகளை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.. இதுதான் பிடித்திருக்கு எனக்கு..

* தினேஷ்மாயா *

0 Comments: