மீண்டும் என் வலைக்கு..

Friday, January 31, 2014


           வேடன் வைத்த வலையில் சிக்காமல் ஓடும் மான் போல, என் வலையில் சிக்காமல் இந்த மாதம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தேன். இன்றுடன் இம்மாதம் முடிகிறது. புத்தாண்டு பிறந்ததிலிருந்தே ஓட்டம் ஆரம்பம்தான். மூன்றாம் தேதி குடும்பத்தாருடன் காஞ்சிபுரம், மகாபலிபுரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை என்று சுற்றுலா சென்றோம். எல்லாம் முடித்துவிட்டு சென்னை வந்தால், இங்கே படிப்புக்கும் வேலைக்குமே நேரம் சரியாய் இருக்கிறது. புத்தக கண்காட்சி, தி இந்து இலக்கிய விழா, இசைக்கச்சேரி என்று சுற்றிக்கொண்டும் இருந்தேன். அதற்குள் பொங்கல் வந்தாகிவிட்டது. வீட்டுக்கு சென்று குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இந்த பொங்கலை கொண்டாடினேன். மீண்டும் சென்னை வந்து ஓட்டம். அதுவும் மார்ச் மாதம்வரை அலுவலகத்தில் கொஞ்சம் ஓட்டம் அதிகம் இருக்கும். இன்னும் பல கடமைகளும் பொறுப்புகளுக்குமான ஓட்டம்.....

          இந்த ஓட்டங்களுக்கிடையில் என் வலையில் சிக்கிக்கொள்ள எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்று என்ன ஆனாலும் சரி என்று மீண்டும் வலைக்கு வந்துவிட்டேன். என் வலையை பிண்ணாவிட்டாலும், இந்த ஒரு மாதத்தில் என் வலையில் பிண்ண என் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் ஒவ்வொன்றையும் என் செல்பேசியில் குறித்துக்கொண்டுதான் வந்தேன். அதிகம் பேசாமல் என் பின்னலை தொடர்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: