உறவே என் ஆசை உறவே…

Friday, August 08, 2025


என்ன விட்டு போவேன்னுதான்

நானும் நெனக்கல…

எல்லாம் கைய மீறி போச்சே

மனசு கேக்கல…


என்ன விட்டு போவேன்னுதான்

நானும் நெனக்கல…

எல்லாம் கைய மீறி போச்சே

மனசு கேக்கல…


எட்ட வந்து நின்னு

என் புத்தி எட்டி பாத்திச்சு


கத்தி தேவ இல்ல

உன் மௌனம் குத்தி சாச்சுச்சு


உறவே என் ஆசை உறவே…

பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…


குறையேதும் வைக்கவில்லை

எனதாங்கும் பூமி நீதாண்டி…


 ஓஓஓஓ…


நீயில்லாம நானும்

நீலமில்லா வானம்

மண்ண வந்து முட்டும்

நூலருந்த பட்டம்


கூடருந்த நேரம்

சொல்லிப்பாத்த நீயும்

தள்ளி வந்து இப்போம்

கெஞ்சி என்ன லாபம்


அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள

ஈரம் கொஞ்சம் பூக்காதா?

இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம்

சாரல் எட்டி பாக்காத?


கட்டாறா வாழ்ந்திட்டேன்

என்ன தெச பாத்து வழி மாத்து

அடி உன்ன விட்ட யாருமில்லை..


உறவே என் ஆசை உறவே…

பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…


குறையேதும் வைக்கவில்லை

எனதாங்கும் பூமி நீதாண்டி…


என்ன விட்டு போவேன்னுதான்…

எல்லாம் கைய மீறி போச்சே…


எட்ட வந்து நின்னு

என் புத்தி எட்டி பாத்திச்சு

கத்தி தேவ இல்ல

உன் மௌனம் குத்தி சாச்சுச்சு


 உறவே என் ஆசை உறவே !!

உறவே என் ஆசை உறவே !!

நான் கட்டாறா வாழ்ந்திட்டேன் !!

என்ன தெச பாத்து வழி மாத்து !!

அடி உன்ன விட்ட யாருமில்லை !!!!!


 படம்: லப்பர் பந்து

இசை: ஷான் ரோல்டன்

குரல்: ஷான் ரோல்டன்

வரிகள்: மோகன் ராஜன்


இப்போ நானிருக்கும் மனநிலைக்கு, என் துணைவியை நினைச்சு, அவளுக்கு இந்த பாடலை நான் சமர்ப்பிக்கிறேன்..

கணத்துடன், கண்ணீருடன் !


* தினேஷ்மாயா *

எது சுதந்திரம் ?

Thursday, August 07, 2025


1. நீ யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை.

2. நீ யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திருக்க தேவையில்லை.

3. நீ எவருக்கும் உன் மனதை புரியவைக்க வேண்டியதில்லை.

4. நீ நீயாக வாழ எவரிடமும் சம்மதம் பெற வேண்டியதில்லை.

5. உன் மனதிற்கு சரியென பட்டதை செய்ய எவரின் அனுமதியும் கேட்க தேவையில்லை.

6. நிபந்தனையின்றி நீ அனைவரிடத்தும் அன்பு செலுத்திக்கொண்டிருக்கிறாய்.


இந்த சூழ்நிலைகளில் நீ இருக்கிறாய் என்றாலே,

நீ சுதந்திரமானவன் !!


* தினேஷ்மாயா *

உயிர்ப்புடன் இருக்கிறேன்



 எப்போதெல்லாம் நான் இங்கே வருகிறேனோ, 

அப்போதெல்லாம் நான் எனக்கே சொல்லிக்கொள்வது ஒன்றுதான்...

நான் இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கிறேன்...


உயிருடன் இருப்பதற்கும்

உயிர்ப்புடன் இருப்பதற்கும்

நிறைய வித்தியாசம் இருக்கிறது.


- உயிர்ப்புடன்

* தினேஷ்மாயா *

உருகி உருகி போனதடி...



உருகி உருகி போனதடி

என் உள்ளம் யான் நீயே

குறுகி குறுகி போனதடி

என் எண்ணம் யான் நீயே

 

 நீ இன்றி மூடுமே என் வானம்

 நீதானே என் காதலே என்னாளும்


 உருகி உருகி போனதடி

என் உள்ளம் யான் நீயே

குறுகி குறுகி போனதடி

 என் எண்ணம் யான் நீயே

 

 யாழோ...? மூரலோ...? தேனோ...?

 பேசும் நேரமோ......?

 பாலோ...? பாதமோ...?

 ஆடை.... காலின் அணிகலோ?

 

 கரைகளில் கரையும் வெண்ணுறை

 கடைத்திடும் மொழிகளா

 விழிகளின் வளையல் வானவில்

 நிறங்களே காதலே

  

நீ இன்றி மூடுமே என் வானம் 

நீதானே  என் காதலே என்னாளும்

 

உருகி உருகி போனதடி

என் உள்ளம் யான் நீயே

குறுகி குறுகி போனதாடி

 என் எண்ணம் யான் நீயே

 

 உருகி உருகி போனதடி

 என் உள்ளம் யான் நீயே

 குறுகி குறுகி போனதாடி

 என் எண்ணம் யான் நீயே


திரைப்படம்: ஜோ

குரல்: ஆனந்த் அரவிந்தாக்ஷன்

இசை: சித்து குமார்

வரிகள்: விக்னேஷ் ராமகிருஷ்ணா.


பல ஆண்டுகள் கழித்து மனதை வருடி செல்லும்படியான ஒரு இனிமையான பாடல்..


* தினேஷ்மாயா *