வாழ்க்கையின் முரண்

Sunday, June 07, 2020


அவனிடம் வம்பு வைத்துக்கொள்ளாதே. அவன் எது சொன்னாலும் அப்படியே நடந்துவிடும். அவன் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடந்துவிடும். நமக்கேன் வம்பு. அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

இப்படி ஒரு சிலர் பேச நாம் கேட்டிருப்போம்.

இதுபோல சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எது சொன்னாலும், எது நினைத்தாலும் அப்படியே நடந்துவிடும். கருநாக்கு உடையவன் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கிருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால். இப்படி ஒரு அறிய சக்தி இருக்கும் இவர்கள், ஏன் அதை நல்ல விடயத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஏன் எப்போதும் நல்லதையே நினைத்துக்கொண்டும் நல்லவற்றையே சொல்லிக்கொண்டும் இருக்கலாமே.

இதுதானோ வாழ்க்கையின் முரண் ??

* தினேஷ்மாயா *

0 Comments: