விழிப்புணர்வுடன் இருப்போம்

Sunday, June 07, 2020



இந்த கொடிய கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாகி கொத்து கொத்தாக மக்கள் மடியும் நேரம் வந்தால், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சவப்பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை கையில் எடுத்துக்கொள்வார்கள்.

அவர்களுக்கு எப்போதும் சந்தை தங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். சில நேரங்களில் எது தேவையோ அதை சந்தைப்படுத்துவார்கள், அல்லது செயற்கையாக ஒரு தேவையை உருவாக்கிவிடுவார்கள்.

மக்கள்மீது அக்கறை ஏதுமின்றி சந்தை பொருளாதாரம் என்று முன்னிலைப் பெற்றதோ அன்றே நமக்கான சவக்குழிகளை இந்த கார்ப்பரேட்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதில் விழுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நமது தலையாய கடமை..

இதைப்பற்றி விரிவாக மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: