நானும் என் தெய்வமும்...

Saturday, May 13, 2017



நேற்று மாலை வெளியெ சென்றுவிட்டு வீடு வரும் வழியில் ஒரு சுவரொட்டி பார்த்தேன். அன்னையர் தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனைக்கான இரத்ததான முகாம் 13.05.2017 அன்று நடைப்பெறுகிறது என்று. அதை கண்டதும் முடிவு செய்துவிட்டேன், நிச்சயம் இதில் பங்குபெற வேண்டும் என்று. இதை என் அன்னையிடம் நேற்றிரவு பேசும்போது சொன்னேன். என்ன திடீர்னு இரத்ததானம் எல்லாம் என்று கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன், நீ உன் இரத்தம் கொடுத்துதான் என்னை உருவாக்கினாய். உன் நினைவாக நானும் உன்னை பெருமைப்படுத்தும் விதமாக இரத்ததானம் தருகிறேனே என்றேன். புன்முருவலுடன் அம்மா சொன்னாள். எதைக்கேட்டாலும் அதுக்கு ஒரு காரணம் ரெடியா வெச்சிருக்க என்று !

நானும் சிரித்துக்கொண்டே அவளுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: