புத்தக கனவு

Tuesday, August 12, 2014


   இன்றைய கனவு ரொம்ப சிறியது. என் வீட்டில் நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் சிலவற்றை என் கைகளில் எடுத்துக்கொண்டு எங்கோ ஒரு இடத்துக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். அது சற்று மேடான இடம். கீழே இருந்து அந்த இடத்துக்கு நான் மூச்சிரைக்க நடந்து செல்கிறேன். அந்த இடத்தை அடைந்ததும், சென்னை புத்தக கண்காட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதியிருக்கிறது. இப்போதுதானே முடிந்தது, அதற்குள் மீண்டும் நடத்துகிறார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 

கனவு அவ்வளவுதான். இத்தோடு இந்த கனவு முடிந்தது, வேறு கனவும் வரவில்லை, தூக்கமும் கலையவில்லை !

* தினேஷ்மாயா *

0 Comments: