தேவதையே வா என் தேவதையே வா

Thursday, May 31, 2012







தேவதையே வா என் தேவதையே வா


உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்

பூமழையே வா என் பூமழையே வா

உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்

பாவம் தானே பூமியில்

சிலுவைளும் சிறகெனப் பறந்திடு

தேவதையே வா என் தேவதையே வா

உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்



விளையும் பூமி தண்ணீரை விலகச் சொல்லாது

அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது

சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது

வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது

பாதை தேடும் கால்கள் தான் ஊரைச் சேரும்

குழலை சேரும் தென்றல் தான் கீதமாகும்

சுற்றும் இந்த பூமியை சுழலச் செய்யும் காதலை

கற்றுக் கொண்டேன் உன்னிடம்

இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை





அடைமழை நம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்

அனலாய் வெயில் சுட்டாலே மழையே தூவென்போம்

தனிமைகள் தொல்லை தந்தாலே துணையைக் கேட்கின்றோம்

துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்

ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்

கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே

அன்பை வைத்து வாழலாம்

சுகமென தினம் சுமைகளில் மகிழ்ந்திரு



தேவதையே வா என் தேவதையே வா

உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்

பூமழையே வா என் பூமழையே வா

உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்

பாவம் தானே பூமியில்

சிலுவைளும் சிறகெனப் பறந்திடு





படம்: மலைக்கோட்டை

இசை: மணிசர்மா

பாடியவர்: விஜய் யேசுதாஸ்

வரிகள்: யுகபாரதி

 
 
 
- என்றும் அன்புடன்..
 
தினேஷ்மாயா

0 Comments: