தமிழ் மகளுக்கு

Thursday, May 31, 2012







தமிழ் மகளுக்கு

தேடித் தேடி மருத்துவம் செய்தும்

மாறாதிந்த சாதி ஜுரம்.

கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது

வியாதியில் வந்து முடிந்தது காண்

காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்

கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்

சொல்லிப் புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்

காரியம் கெட்டுப் போனது காண்

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி

ஆயிர மாண்டுகள் செய்ததனால்

ஆகமம் பழகிப் போனது காண்

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்

காவியின் வண்ணம் சற்றே மாறி

கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்

சாதியுஞ் சாமியும் சாராயம் போல்

சந்தைக் கடையில் விற்குது காண்

சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்

மாறா வர்ணம் நாலும் காண்

புத்தன் சொன்ன தம்ம பதத்தில்

பாதி மட்டுமே பிரபலம் காண்



எழுதியவர்: நடிகர் கமல்ஹாசன்

 
- என்றும் அன்புடன்..
 
தினேஷ்மாயா

0 Comments: