காற்றோடு பட்டம் போல

Saturday, April 15, 2023



காற்றோடு பட்டம் போல

இந்த காற்றோடு பட்டம் போல


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?


எங்கோ போனது 

என்னிடம் வந்து சேருமா…?


ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று


நம் வாழ்க்கை எப்போதும்

கண்ணாமூச்சியா…?


இந்த மண் மேலே இப்போது

நான் தான் சாட்சியா…?


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


பக்கத்துல வாழும்போது

உன்னருமை தெரியல


உன்னருமை தெரியும்போது

பக்கம் நீ இல்ல


தன்னந்தனி படகுபோல

தத்தளிக்கும் வாழ்க்கை போல


தண்டனைகள் ஏதும் இல்ல

இந்த மண்ணுல


நீரிலே பூத்தாலும்

பூக்களின் வாசங்கள்

தண்ணியிடம் சேர்வதில்லையே

என்ன விதியோ?


அன்பிலே அன்பிலே

இந்த மனம் வாடுதே

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லிலே பூவும் பூக்குதே


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


சின்னதொரு சோற்றைதானே

சிற்றெறும்பு கூடியே

தன்னுடைய வீட்டைநோக்கி

கொண்டு போகுமே


உள்ளபடி சொல்வதென்றால்

சிற்றெறும்பு போலக்கூட

சொந்தங்களை காக்கவில்லை 

இங்கே நானுமே 


கோயில்தான் போனாலும்

புண்ணியம் செய்தாலும்

என்னுடைய பாவம் தீருமோ

இந்த உலகில்


இன்றுதான் இன்றுதான்

என் முகத்தை பார்க்கிறேன்

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லையும் காலம் மாற்றுதே


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?


எங்கோ போனது என்னிடம்

வந்து சேருமா…?


ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று


நம் வாழ்க்கை எப்போதும்

கண்ணாமூச்சியா…?


இந்த மண் மேல இப்போது

நான் தான் சாட்சியா…?


திரைப்படம்: அயோத்தி

வரிகள்: சாரதி

இசை: N.R.ரகுநாதன்

குரல்: பிரதீப் குமார்



* தினேஷ்மாயா *

0 Comments: