நல்லவர்கள் கூடும் போது..

Saturday, April 15, 2023


நல்லவர்கள் கூடும் போது

நன்மைகளும் கூடி போகும்

கண் இமைக்கும் நேரம் போதும்

எல்லாம் மாறுமே


புன்னகையின் வாசமின்றி

இன்று வரை பூமி மேலே

நிம்மதியில் வாழ்ந்ததாக

இல்லை யாருமே


துன்பமும் இன்பமும்

கற்றுத் தரும் காலமே

நம்பினால் யாவும் மாறுமே

நம்பு மனமே


உன்னையும் என்னையும்

ஒன்றிணைக்கும் வாழ்விலே

அன்புதான் பாலமாகுமே

அன்புதான் பாலமாகுமே…


ஆராரோ ஆரிராரோ ஆரிராரிராே

இன்று யார்யாரோ செய்த அன்பால் 

நெஞ்சம் பூத்ததோ

எல்லா நாளுமே

விதை நெல்லாய் ஆகுமே

அன்பால் யாருமே பக்கம் வந்து

நின்றால் போதுமே


சிறு வெள்ளைத் தாள் மீது

பல வண்ணம் சேரும் போது

அங்கே தான் உண்டாகும்

தன்னால் மாற்றமே


இந்த நம்பிக்கை ஒன்றே தான்

நம்மை தேற்றுமே…


திரைப்படம்: அயோத்தி

வரிகள்: சாரதி

இசை: N.R.ரகுநாதன்

குரல்: சாய் விக்னேஷ்


படமும் சரி இந்த பாடலும் சரி, மனதை தொட்டுவிட்டது.

கண்களையும் குளமாக்கியது எனவும் சொல்லலாம்.

ரொம்ப நாள் கழிச்சு மனதை அதிகம் தாக்காமல் கனமாக்காமல் லேசாக வருடி அதே சமயம் கண்ணீரையும் தந்துவிட்டு சென்ற திரைப்படம்.

அன்பையும் மனிதத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு மனதும் மனிதரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இந்த வரிகள் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. உணர்வுபூர்வமான வரிகள் !!

* தினேஷ்மாயா *

0 Comments: