புலம்பல்கள்

Thursday, June 10, 2021

நான் உன்னுடன் பேச நினைத்து, என்னுள்ளேயே பேசிக்கொண்ட வார்த்தைகளை சேமித்தால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பல புத்தகங்களை பிரசுரிக்கலாம்.

நான் உன்னிடம் அழ நினைத்து, கண்ணீர் வரும்படி தனியாகவும், கண்ணீரை வெளிப்படுத்தாமல் என்னுள்ளும் தொண்டை தழுதழுக்க அழுதபோது வெளிப்பட்ட கண்ணீரை எல்லாம் சேமித்தால் செவ்வாய் கிரகத்தில் இவ்வுலகின் அனைத்து உயிரினங்களும் வாழப் போதுமான நீரை காணலாம்.

நான் உன்னிடம் காட்ட விரும்பி, ஆனால் உன்னிடம் வெளிக்காட்டாமல் விட்ட அன்பினை சேமித்தால், பிரபங்சத்தையே நிரப்பிடலாம்.

* தினேஷ்மாயா *

0 Comments: