திருநாள் இந்த ஒருநாள்

Sunday, December 04, 2022

 



தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்

ஆரிராரோ ஆராரோ

தங்க கை வலை வைர கை வலை

ஆரிராரோ ஆராரோ


இந்த நாளிலே வந்த ஞாபகம்

எந்த நாளும் மாறாதோ

கண்கள் பேசிடும் மௌன பாசையில்

என்னவென்று கூறாதோ


தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்

பாடல் பாட மாட்டாயோ


திருநாள் இந்த ஒரு நாள்

இதில் பலநாள் கண்ட சுகமே

தினமும் ஒரு கனமும்

இதை மறவா எந்தன் மனமே


விழி பேசிடும் மொழி தான்

இந்த உலகின் பொது மொழியே

பல ஆயிரம் கதை பேசிட

உதவும் விழி வழியே


படம்: தெறி

இசை: GV பிரகாஷ்

குரல்: பாம்பே ஜெயஸ்ரீ

வரிகள்: புலமைப்பித்தன்.


இந்த பாடலை இன்றுதான்  முதலில் கேட்டேன். படம் பார்த்தபோதுகூட இந்த பாடல் மனதில் இடம் பிடிக்கவில்லை. 

என்னவோ தெரியவில்லை, இந்த பாடலை முதலில் கேட்டதுமே கண்கள் நீரை சொரிந்தது.. ஆனந்தக்கண்ணீர் !!!

திருநாள் இந்த ஒருநாள் - இப்போது இந்த வரிகள்தான் என்னுடைய Mobile Ringtone...  

இந்த வரிகள் அனைத்து உறவுக்கும், அனைத்து தருணத்திற்கும் பொருத்தமாய் இருப்பதாக நான் உணர்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: