உயிரெழுத்துக்களால் உயிர் செய்கிறேன் !

Monday, March 12, 2018



அந்திமாலைப் பொழுதில்

ஆதவன் மறையும் இவ்வேளையில்

இருவரும் தனியாய் ஒரு

ஈடுசெய்ய முடியாத செயலுக்காக

உயிராய் உருகி

ஊண் வருத்தி நம் இன்னுயிரை

எதிர்நோக்கி

ஏகாந்தமாய் காத்திருக்கையில்

ஐமுகன் அருளோடு

ஒரு அழகான தேவதையின் வருகையை - நீ

ஓடோடி என்னருகே வந்து என் காதில் சொல்வதை

ஔவியத்தோடு ஊரே பார்த்ததடி !

* தினேஷ்பூர்ணிஷா *

0 Comments: