Unique

Friday, December 23, 2016



I stay unique..

But people say am so different !

* தினேஷ்மாயா *

தோழன் சாய்ராம்

Thursday, December 22, 2016





அனைத்து தருணங்களில்லும் தோள் சாய

தோழனாய் நீ இருக்கிறாய் சாயிராம்..

* தினேஷ்மாயா *

இசைஞானி பாடல்கள்

Tuesday, December 20, 2016


இசைஞானியின் அருமையான பாடல்களை கேட்கவேண்டுமா ? உடனே கிளம்புங்கள். எதாவது ஒரு குக்கிராமத்துக்கு தனியார் பேருந்தில் பயணப்படுங்கள். அல்லது, இரவு நேரத்தில் எதாவது ஒரு அரசு பேருந்தில் நெடுந்தூர பயணம் செய்யுங்கள். உங்களுக்காகவே இளையராஜா அங்கே பல அருமையான பாடல்களோடு காத்துக்கொண்டிருக்கிறார்.

மழைச்சாரல், சில்லென்ற பனிக்காற்று, மனதிற்கு பிடித்த நபர் அருகில், ஜன்னலோர இருக்கை, இரவு பயணம்..

இவை சேர்ந்துக்கொண்டால், அப்போது கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை..

* தினேஷ்மாயா *

விடிய விடிய கவிதை சொல்லி


"விடிய விடிய கவிதை சொல்லி

மனசு கிள்ளி மலர வைக்கும்

உறவு வந்ததே.."

- 'சேது' திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் வரிகள் இவை

* தினேஷ்மாயா *

புத்துணர்ச்சியை


வெற்றிகரமாக இந்த ஆண்டு

300 பதிவுகளை கடந்து பயணிக்கிறேன் !

இது எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது..

* தினேஷ்மாயா *

தஞ்சம்


வானிலிருந்து விழும் நட்சத்திரம் யாவும்

உன் கண்களில்தான் தஞ்சம் அடைகிறது..

* தினேஷ்மாயா *

நீ என்னருகே வந்து

நான் வார்த்தைகளால் கவி எழுதிக்கொண்டிருக்கையில்

நீ என்னருகே வந்து -

உன் உதடுகளால் கவி எழுதிவிட்டு ஓடிவிடுகிறாய் ..

* தினேஷ்மாயா *

உன்னை கண்டு

இத்தனை ஜென்மம் நான் எடுத்தது

இந்த ஜென்மத்தில் உன்னை கண்டு

முக்தி அடைவதற்குத்தானோ ?

* தினேஷ்மாயா *

போர்வைக்குள் இருண்டுவிடுகிறது !


ஹே போடி..

இதே வேலையா போச்சு உனக்கு..

காதலோடு நான் பார்க்க

காமத்தோடு நீ பார்க்க

நம் பார்வை போர்வைக்குள் இருண்டுவிடுகிறது !

* தினேஷ்மாயா *

சரிதானே ?

உன் வெட்கத்திற்கு

என் ஓரப்பார்வையை

நான் தீணியாக கொடுக்கிறேன்..

சரிதானே ?

* தினேஷ்மாயா *

இன்னொரு பிறப்பு


நீ துணையாக வந்தால்

இன்னொரு பிறப்பும் எடுக்க நான் தயார்..

* தினேஷ்மாயா *

கண்ணடித்துவிட்டு செல்வாய் நீ !


எதைப்பற்றி எழுதலாம் என்று

என் கவிதைகளுக்கு கருவை தேடிக்கொண்டிருக்கையில்

என் சிந்தையில் வந்து கண்ணடித்துவிட்டு செல்வாய் நீ !

நீ இருக்கிறா என்பதை எனக்கு நினைவூட்ட !

* தினேஷ்மாயா *

என் மதியில்


உன் மடியில் நான் எப்போதாவது உன் குழந்தையாவேன்

என் மதியில் எப்போதுமே நீ குழந்தையாகத்தான் இருக்கிறாய் கண்ணே

* தினேஷ்மாயா *

நீதான் என்னுடைய சீமையே


சீமையில் இல்லாத அழகியா அவள் என்றார்கள் உன்னை..

அவர்களுக்கென்ன தெரியும் ?

நீதான் என்னுடைய சீமையே என்று !

* தினேஷ்மாயா *

சந்திரலோகமே இருண்டதடி

சந்திரலோகமே இருண்டதடி

நீ பூமிக்கு வந்துவிட்டதால் !

* தினேஷ்மாயா *

யசோதா


என்ன தவம் செய்தனை யசோதா? 

இந்த யசோதையையே துணையாய் பெற, நான்

என்ன தவம் செய்தனை யசோதா?

* தினேஷ்மாயா *

பொய்யான கோபம்

உன்னிடம் எனக்கு பிடித்ததே

உன் பொய்யான கோபம் தானடி செல்லமே !

* தினேஷ்மாயா *

நமக்காக ஒன்று !


நாதஸ்வரம் ஒலிக்கிறது

என் நாதமே ஸ்வரமாய் உன்னுள் கலக்கிறது

கெட்டிமேளம் ஒலிக்கிறது

உன் கால்களில் மெட்டி அணிவிக்கிறேன்

எனக்காக ஒன்று உனக்காக ஒன்று

நமக்காக ஒன்று !

மூன்று முடிச்சுப்போடுகிறேன்..

* தினேஷ்மாயா *

பரிசாக கொடுத்தோம்..

நிழல் தரும் மரத்தினடியில்

நாமிருவரும் மரத்திடமிருந்து நிழலைப்பெற்றுக்கொண்டு

நம் காதலை மரத்திற்கு பரிசாக கொடுத்தோம்..

* தினேஷ்மாயா *

என்னருமை காதலி


காதலிதான் மனைவியாக வரவேண்டும் என்றென்னி பல விஷயங்களை இழந்தேன்

இன்று தான் உணர்ந்தேன்.. வரப்போகும் மனைவிதான் என்னருமை காதலி என்று..

* தினேஷ்மாயா *


என்னவளுடன்..




என் சின்னஞ்சிறு ஆசைகளை என்னவளுடன் சேர்ந்து செய்ய வேண்டும். நேற்று கொஞ்சம் நேரம் கிடைத்தபோது ஒரு சில விஷயங்களை எழுதி வைத்தேன். அதை இங்கே பதிகிறேன்.

* கடற்கரையில் சூரிய உதயத்திற்கு முன்னர் காலார நடந்து செல்ல வேண்டும்

* மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ( தேனிலவுக்கு மலேசியா செல்ல வேண்டும், அங்கே முருகனை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்குண்டு )

* ஏதாவது தீம் பார்க்-ல் நாங்கள் இருவரும் அனைத்து விளையாட்டுக்களையும் சேர்ந்து விளையாட வேண்டும்.

* கார் மற்றும் பைக்-ல் நெடுந்தூர பயணம்

* அருவியில் குளியல்

* நீச்சல் குளத்தில் விளையாட்டு

* கோவில் கோவிலாக சுற்ற வேண்டும் அப்படியே ஊர் ஊராக ஊர் சுற்ற வேண்டும் அனைத்து கவலைகளையும் மறந்து

* காலை இருவரும் ஒன்றாக யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

* ஒன்றாக சமைக்க வேண்டும்

* ஒன்றாக பாடல் கேட்க வேண்டும், அவளும் நானும் ஒன்றாக பாட வேண்டும்

* இருவரும் ஒன்றாக, போட்டியாக ஏதாவது ஒரு வீடியோ கேம் விளையாடவேண்டும் - எதிரெதிர் அணியில் இருந்தவாறு

* அவள் தலைப்பு சொல்ல சொல்ல நான் உடனடியாக கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்

* இருவரும் எங்கே சென்றாலும் வேட்டி சேலையில் நம் பாரம்பரிய உடையணிந்தே செல்ல வேண்டும்

* ஒன்றாக ஓவியம் தீட்ட வேண்டும்

* நான் அவளுக்கு புகைப்படம் எடுக்க கற்று கொடுத்துவிட்டு அவள் புகைப்படம் எடுப்பதை ரசிக்க வேண்டும்

* மழையில் ஒன்றாக நனையனும்

* #Dubsmash

* வீட்டுக்குள் நடனம் ஆடனும்

* ஒன்றாக புத்தகம் படிக்கனும்

* இரவு காட்சி - திரையரங்கில்

* Photo in Mug

* Photo in Pillow

* Rudraksham

* Mono acting

* All adventures like - Parachute, Paragliding, Rafting, Bunjee Jumping, Etc.

* Playing Games together - Shuttle, Carrom, Chess, Etc

* Playing Skipping together

* WINDOW shopping ;-)

* Road side hotel food

* Candle light dinner @ Star Hotel & Beach Resort

* Social Service

* Adopting a child

* Minimalism

* Silly fights

* ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெரின்

* தினேஷ்மாயா *

இனிவரும் காலங்களில்


இனிவரும் காலங்களில் அஞ்சலி செலுத்தும் விதம் இப்படியும் மாறக்கூடும்.

" அனைவரும் தங்கள் - WiFi-ஐ அனைத்துவிட்டு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது "

* தினேஷ்மாயா *

காதலித்துப்பாருங்களேன்.


பொதுவாக காத்திருப்பு என்பது அனைவருக்கும் வெறுப்பைத்தான் தரும். ஆனால், காதலில் மட்டும்தான் காத்திருப்பு என்பது சொர்க்கத்திற்கு சமமாக கருதப்படும். இதை உணரவேண்டுமா ? 

காதலித்துப்பாருங்களேன்.. உங்களுக்கே புரியும் ..

* தினேஷ்மாயா *

உன்னதமான காதல்


திருமணத்திற்கு பிறகு வரும்காதல் தான் உன்னதமானது தூய்மையானது உண்மையானது என்பதை நான் உணரத்தான் இந்த காதலும் காதல் தோல்வியையும் நான் சந்தித்தேனோ ?

* தினேஷ்மாயா *

தேவதையை காண்கிறேன் !


ஆலய கதவை திறந்தால் தெய்வத்தை காணலாம்

இங்கோ நான் தேவதையை காண்கிறேன் !

* தினேஷ்மாயா *

என்றென்றும் சுமப்பேன்


நம் குழந்தையை நீ சுமப்பாய் என்பதைவிட
நான் உன்னை என்றென்றும் சுமப்பேன் என்பது சத்தியமடி..
* தினேஷ்மாயா *

பாவையே


பூவை வைத்திருக்கும் பாவையே
நாள்தோறும் உன் தரிசனம் தேவையே
* தினேஷ்மாயா *

ஒரு வெண்பாவை..


மல்லிப்பூவை அள்ளிக்கொடுத்தேன்
அல்லிப்பூவை கிள்ளிக்கொடுத்தேன்

இப்பெண்பாவைக்காக ஒரு வெண்பாவை பாடிக்கொடுத்தேன்
* தினேஷ்மாயா *

அந்த தருணம்


நீ என் கண்களை உற்று நோக்கும் தருணம்

நொடிப்பொழுதில் எனக்கேற்படும் மரணம்..

* தினேஷ்மாயா *

எது முக்கியம்


அழகு முக்கியமா ?
அன்பு முக்கியமா ? என்று
நான் யோசித்துக்கொண்டிருக்கையில்

நீதானடா எனக்கு முக்கியம் என்று வந்தவளே !
* தினேஷ்மாயா *

புது வருடம்:


புது வருடம்:
எல்லோரும் சொல்வதுதான். இப்போதுதான் ஜனவரி வந்தமாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிருச்சு. இதையேதான் இவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். நொடியும், நிமிடமும், மணியும், நாளும், வாரமும், மாதமும், வருடமும் அது தன்னிச்சையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் ஒரே இடத்தில் அமர்ந்துக்கொண்டு காலத்தை கணித்துக்கொண்டும், அதை வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் நமக்கு சொந்தமான காலத்தை நமக்கு சொந்தமில்லை என்கிற மாயையை நம்பி வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.
365/366 நாட்களுக்கு ஒருமுறை புதுவருடம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வேகமாக கடந்த்து என்பது முக்கியமல்ல. இந்த வருடத்தில் நாம் சாதித்தது என்ன என்பதுதான் முக்கியம். சாதனை என்றால் நீங்கள் பெரிதாக எண்ண வேண்டாம். நோபல் பரிசோம் ஆஸ்கர் பரிசோ, பாரத ரத்னா பெறுவதுதான் சாதனை என்றில்லை. நம்முள் இருக்கும் நல்ல மனிதனை கண்டெடுத்து, அவனை இந்த சமூகத்திற்காக எதையாவது செய்ய விடவேண்டும். நம்முள்ளேயே எப்போதும் இருக்கும் அந்த நல்ல மனிதனை இந்த சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுப்பதும் ஒருவகை சாதனைதான்.
ஆம். சிறு சிறு விஷயங்களில் இருந்து தொடங்குவோம். முதலில் சிரிப்போம். நிபந்தனைகள் ஏதுமின்றி, எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி. இதில் இரண்டுவகை உண்டு. நமக்கு தெரிந்தவர்களிடம் சிரித்து பேசுவது, நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் சிரித்து பேசுவது. பெரும்பாலும் நன் அன்றாட வாழ்வில் நமக்கு அறிமுகமில்லாத நபர்களையே அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களிடம் தவறாமல் சிரித்து பேசுங்கள், அப்படி முடியாவிட்டாலும் ஒரு புன்முறுவல் புரியுங்கள். இதுவே அன்றைக்கு நீங்கள் செய்த மிகப்பெரும் சாதனை.
நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ, பொது இடத்திலோ எங்காவது மின்சாரமோ, தண்ணீரோ வீணாவதை கண்டால் அதை சரிசெய்ய உங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ளுங்கள். அதில் நீங்கள் வெற்றிப்பெற்றாலும் வெற்றிப்பெறாவிட்டாலும் பரவாயில்லை. இயற்கையின் வளங்களை காக்க ஒரு முயற்சி செய்தீர்களே. அதுவே அன்றைய சாதனைதான்.
குப்பைகளை நீங்கள் இருக்கும் இட்த்திலேயே போடாமல், உங்கள் சட்டைப்பையிலோ, தோள்பையிலோ போட்டுக்கொண்டு, எப்போது குப்பைத்தொட்டியை பார்க்க நேர்கிறதோ அதின் அந்த குப்பையை போடுங்கள். இதில் பலருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
பேசுவதை குறைத்துவிட்டு, அதிக நேரம் அமைதியாக இருந்து என்ன காரியம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். புத்தகம் படிக்கலாம், இன்னிசை கேட்கலாம், தியானம், யோகா பழகலாம், படம் பார்க்கலாம், காலார நடந்து செல்லலாம், உடற்பயிற்சி செய்யலாக் இப்படி நிறைய உண்டு. முதலில் பேச்சை குறையுங்கள். நிம்மதி தானாக வரும். அதிக பேச்சுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை பின்னாளில் பட்டு தெரிந்துக்கொள்வதைவிட, இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்.
புதுப்புது இடங்களுக்கு பயணப்படுங்கள். அது உங்களுக்கு நிறைய அனுபவங்களை கொடுக்கும். அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் எவரும் கற்றுகொடுக்க முடியாத அனுபவங்கள். உங்கள் பயணமே உங்கள் ஆசான்.
இந்த வருடம் நான் அதிகமாக எவர்க்கும் துன்பம் கொடுக்கவில்லை, என்னால் இன்பமுற்றவர்களே அதிகம், அதேபோல இந்த வருடம் எனக்கும் அதிகமாக எவரும் துன்பம் கொடுக்கவில்லை, என்னைச்சுற்றி நல்லவர்களே அதிகம் ஆகையால் இந்த வருடம் எனக்கு அதிக நன்மையே நடந்த்து என்று நீங்கள் எந்த வருடத்தை உணர்கிறீர்களோ அந்த வருடம் உங்கள் வாழ்நாளில் சிறப்பான் வருடம் என்று சொல்லலாம்.
இந்த வருடத்தில் புது வேலை கிடைத்த்து, புது வீடு வாங்கினேன், திருமணம் ஆனது, குழந்தை பிறந்த்து, புது நட்பு கிடைத்த்து என்பதெல்லாம் சாதனையாக கருத வேண்டாம். இதெல்லாம் இயற்கை. அது தானாக நடப்பது.
நீங்கள் உங்கள் சுய மேம்பாட்டுக்காக என்ன செய்கிறீர்கள் என்பதுதான் இங்கே அதி முக்கியம். ஆகையால், நீங்கள் வளர்ந்து மற்றவர்கள் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
அப்போதுதான் பிறக்கும் வருடம் உண்மையாக புதுவருடமாக இருக்கும்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

இந்த ஏற்பாடு










என்னை தவணை முறையில் கொல்வதற்காகத்தான்

இந்த ஏற்பாடு போல !

* தினேஷ்மாயா *


ஒரு மொட்டில் இரு பூக்கள்..

Monday, December 19, 2016


ஒரு மொட்டில் இரு பூக்கள்..

பொதுவாக - பூவை செடி தாங்கும்

இங்கோ, பூவை

இன்னொரு பூவே தாங்குகிறது !

* தினேஷ்மாயா *

I need a relationship..


"I need a relationship in which I don't have to keep explaining myself. Nothing is more tiring than having to constantly explaining yourself. Emotional tiredness drains you far more than physical tiredness. So the search is for that one relationship in which I can enjoy the freedom of Trust where I don't have to explain everything about me.
I need a relationship in which I won't be held against myself. I have my strengths. I have my shortcomings. The search is for that one relationship in which my lesser side will not be provoked and instigated constantly. I want that one relationship in which my positives will always be brought to the surface.
I need a relationship in which My today is not viewed with the mistakes I made yesterday... Being human.. I am bound to err every now and then. I want someone who won't maintain a database of my mistakes. The search is for that relationship where yesterday's fight doesn't halt today's communication... where yesterday was over yesterday.
I need a relationship in which it isn't me who has to take the initiative all the time. I need a relationship where I can be transparent. I need a relationship in which I don't have to alter my likes and dislikes to gain and retain the relationship. I need a relationship in which my self-image is not scratched. I need a relationship in which I am not asked to be anyone else. I need a relationship in which I feel completely myself.. even more than when I am with my own self.
I need that one relationship in which I feel as though I am once again in my mother's womb... a relationship in which my heart always feel.. just born"
- Excerpts from 'Unposted Letter' by Mahatria Ra..
நான் என் வாழ்க்கைத்துணை பற்றி என்ன நினைத்திருந்தேனோ அதையெல்லாம் அப்படியே வார்த்தைகளில் இவர் செதுக்கியிருக்கிறார்..

தினேஷ்மாயா *

ஒரு நாள் கூத்து..



ஒரு நாள் கூத்து..

நேற்று இரயிலில் வரும்போது இந்த படம் பார்த்துக்கொண்டே வந்தேன். ஆரம்பத்தில் பாதி மட்டும் பார்த்துவிட்டு தூங்கிவிடலாம் மீதி இன்னொரு நாள் பார்க்கலாம் என்றுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் என்னை முழுவதும் பயணப்பட வைத்துவிட்டது.

படம் ரொம்ப நல்லா இருக்கு. திருப்பங்கள் எதார்த்தமா இருக்கு. இசை படத்திற்கு மேலும் பலம். கதை எதார்த்தமான ஒன்று. திரைக்கதையும் ரசிக்குற மாதிரி இருந்துச்சு. ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி..

* தினேஷ்மாயா *

அடியே அழகே..



அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற

அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத

போனா போறா தானா வருவா மெதப்புள்ள திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு பொசுக்குனு ஒடஞ்சேன்
உன் சுக‌ பார்வ உரசுது மேல‌
சிரிக்கிற ஒச சரிக்குது ஆள‌
தீ தூவி... ஹே... தீ தூவி போனா
அவ வேணும் நானும் வாழ
ஏனோ உன்ன பாத்தா உள்ள‌ சுருக்குனு வருது
ஆன கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது
ஏதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம் ஹே...
நேத்தே நா தோத்தேன் அட‌ இதுதானா உன் வேகம்

அடியே அழகே... அழகே...
அழகே அடியே... அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... வலியே...
ஒளியே ஒளியே... ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற..

படம்: ஒரு நாள் கூத்து
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்: சின் ரோல்டன், பத்மலதா
பாடல்வரிகள்: விவேக்

* தினேஷ்மாயா *

கண்ணாயுதம்



என்னை கொல்ல,

தன் ஆயுதத்தை (கண்களை)

பட்டை தீட்டுகிறாள் போல !

* தினேஷ்மாயா *

மார்கழி பிறந்தது..

Friday, December 16, 2016



அவனையே நினைத்திருந்தாள் ஒரு பாவை..

அவனுக்காக பாடினாள் முப்பது பாவை..

அது ஆனது திருப்பாவை !

மார்கழி பிறந்தது..

* தினேஷ்மாயா *

இதென்ன ?!



குடைக்குள் மழை தெரியும்..

இதென்ன -

குடைக்குள் ஒரு மின்னல் ?!

* தினேஷ்மாயா *

முதல் மரியாதை

Wednesday, December 14, 2016



சமீபத்தில் முதல் மரியாதை திரைப்படம் பார்த்தேன். பாரதிராஜா, இளையராஜா மற்றும் சிவாஜி அவர்கள் இணைந்த திரைப்படம் ஆகையால் இதை நேரம் ஒதுக்கிப்பார்த்தேன். அருமையான படம் என்று தெரிந்துதான் பார்க்கலானேன். அதுப்போலவே, உண்மையாகவே அருமையான படம் தான். சிவாஜி அவர்களின் நடிப்பை சொல்ல வேண்டுமா என்ன? அற்புதம். அவருக்கு ஈடு கொடுப்பதற்கு இத்திரைப்படத்தில் வடிவுக்கரசியின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது. இசை !! என்னவென்று சொல்வது.. இளையராஜா அவர்கள் தான் ஒரு இசைராஜா என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். பாடல்கள் மட்டுமின்றி பிண்ணனி இசையும் பிரமாதம். பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம் பாடல்கள், ராசாவே உன்னை நம்பி, அந்த நிலாவத்தான்... இந்த பாடல்கள் மனதில் அதிகம் நிற்கிறது. மொத்தத்தில் பாரதிராஜா தனக்கான பாணியில் கதை சொல்லி மனதில் நின்றுவிட்டார்.

* தினேஷ்மாயா *