Showing posts with label சாத்தான்குளம். Show all posts
Showing posts with label சாத்தான்குளம். Show all posts

மனித நேயம்

Tuesday, July 07, 2020



அமெரிக்காவில் ஒரு நபரை காவலர் ஒருவர் கொன்றதற்கு ஒட்டுமொத்த நாடும் ஒன்று சேர்ந்து போராடியது. ஆனால், இங்கே சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்திற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட மக்கள் வெளிப்படுத்தாது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

என்னை நேரடியாக பாதிக்காத எந்தவொரு விடயத்திற்காகவும் நான் ஏன் போராட வேண்டும் என்கிற மனநிலையை இந்தியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரின் உரிமைக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையாய் குரக் கொடுக்க வேண்டும். 

அதுவரை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, மக்களை பிரித்தாளவே செய்வார்கள், அப்பாவிகளை வஞ்சிப்பார்கள்.

* தினேஷ்மாயா *

ஆயுத எழுத்து...



சமீபத்தில் ஐதராபாத்தில் நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை பெரும்பாலானோர் கொண்டாடினர். நீதி நிலை நாட்டப்பட்டது என்றனர். அந்த காவல்துறையினருக்கு மலர்கள் தூவி வாழ்த்தினர்.

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது சட்டப்படி கிடைத்திருக்க வேண்டும். காவல்துறையினருக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லை என்று அன்று சொன்னோம். ஆனால், அன்று காவல்துறையினரின் செயலை மெச்சிய மக்கள்தான் இன்று சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்தில் காவல்துறையினருக்கு எதிராக கொதிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு அதிகாரத்தோடு ஆயுதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதங்கள் மக்களை காக்க பயன்படாமல் மக்களை தாக்கவே அதிகம் பயன்படுவதால் அதிகம் பாதிப்பு அப்பாவி பொதுமக்களுக்கே..

* தினேஷ்மாயா *

வாழ்க பணநாயகம்



22-05-2018

இரண்டு ஆண்டுகள் ஆகியும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கே இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்துக்காக நீதியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நிதி மட்டுமல்ல, நீதியும் ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனியே..


வாழ்க பணநாயகம்..
வீழ்க சனநாயகம்..

* தினேஷ்மாயா *