Showing posts with label கோச்சடையான் பாடல் வரிகள். Show all posts
Showing posts with label கோச்சடையான் பாடல் வரிகள். Show all posts

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்

Sunday, March 09, 2014



கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப் பிரியம் காப்பேன்
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம்  பதித்து நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்குக் கேளேன்
ஒவ்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்தஜாம திருடன்போல அழுது பேசேன்
காமம் தீரும்போதும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்
மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ விழுந்தால் தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..

திரைப்படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஹரிசரன்


   ஒரு ஆண் திருமணத்தின் போது பெண்ணுக்கு செய்துக்கொடுக்கும் சத்தியம். இந்த பாடலும், இதற்கு முன்னர் இங்கே நான் பதிவு செய்த பாடலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வரிகள் என்னுள் ஆழமாய் பயணிக்கிறது. நினைவுகளை மேலே பறக்கவைக்கிறது. வைரமுத்து அவர்களுக்கு நன்றி. இந்த வரிகளை கேட்டப்பின்னர் என்னவளுக்கும் நான் மனமார இந்த சத்தியத்தை செய்துகொடுப்பேன்..

* தினேஷ்மாயா *

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்



காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

வாழை வரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழைக்கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்
மழைநாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன்
மழைக்காற்றாய் தலைக்கோதி நித்திரை தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
காலம் மாற்றம் நேரும்போது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..


திரைப்படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்: லதா ரஜினிகாந்த்.

    திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தத்தை எடுத்து சொல்லும் பாடல். மூன்று முடிச்சுக்குள் இருக்கும் அர்த்தம் புரியவைத்திருக்கிறார் வைரமுத்து அவர்கள். இந்த பாடல் வெளிவந்த இரு நாட்களில் பலமுறைக்குமேல் கேட்டிருப்பேன். கோச்சடையானின் மற்ற பாடல்களைவிட இந்த பாடல் என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இந்த பாடலை கேட்கும்போது இப்படியொரு பெண் கிடைக்கவேண்டும் என்று மனம் சொல்கிறது. இந்த பாடலை கேட்கும் போதுதான் திருமணத்தின்மீதே ஆசை வருகிறது.

* தினேஷ்மாயா *