Until Marriage was a Relationship, it was so divine..
When Marriage turned out to be an Institution, all these problems started !!
- DhineshMaya
Until Marriage was a Relationship, it was so divine..
When Marriage turned out to be an Institution, all these problems started !!
- DhineshMaya
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…
சொல்லவே இல்லையே முன்பு யாரும்…
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…
ஒளி எங்கு போகும்…
உன்னை வந்து சேரும்…
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…
சொல்லவே இல்லையே முன்பு யாரும்…
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…
ஒளி எங்கு போகும்…
உன்னை வந்து சேரும்…
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
கண்ணோரம் கொட்டும் மின்னல்…
அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற…
வெக்கம் அங்கும் இங்கும்…
ரெக்கை கட்டுதே…
உன் வாசம் தாயாய் தலை கோத…
மனம் பூக்குதே…
நெற்றி முத்தம் வைக்குதே…
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே…
பாடல் நீயே… ஓஓ…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்…
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்…
என்னவோ என்னிலே…
வண்ணமாய் பொங்குதே…
ம்ம்… துள்ளும் பாட்டிலே…
எழும் விசை…
என்னை மீட்டுதே… ஓஓஓஓ…
நெஞ்சமே நெஞ்சமே…
பக்கம் நீ வந்ததாள்…
திக்கெல்லாம் வெள்ளி மீனே…
நீ தஞ்சமே தஞ்சமே…
உன்னை நீ தந்ததால்…
முள்ளெல்லாம் முல்லைத்தேனே…
ஓ ஓ… செல்லமே செல்லமே…
உள்ளங்கை வெல்லமே…
தித்திக்கும் முத்தமே…
கொஞ்சம் தாயேன்…
ஓ ஓ… செல்லமே செல்லமே…
உள்ளங்கை வெல்லமே…
அந்திபூ காட்டுக்கே கூட்டிப்போயேன்…
காட்டுக்கே கூட்டிப்போயேன்…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…
சொல்லவே இல்லையே முன்பு யாரும்…
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…
ஒளி எங்கு போகும்…
உன்னை வந்து சேரும்…
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
திரைப்படம்: மாமன்னன்
வரிகள்: யுகபாரதி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
குரல்: விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்
இன்றைக்கு கேரளா உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
நிர்வாணம் என்பது எப்போதும் அருவருப்பானதல்ல என்று கூறியிருக்கிறது.
வழக்கின் சாரம்:
ரெஹானா பாத்திமா என்கிற சமூக செய்பாட்டாளர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதின் தன் மேலுடம்பில் உடை எதுவும் இல்லாமல் தன் குழந்தை தன் உடலில் வர்ணம் தீட்டுவதுபோல ஒரு வீடியோ.
அதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து 13 நாட்கள் சிறையில் அடைத்தது கீழமை நீதிமன்றம். பின்னர் அவரை சிறையில் இருந்து கேரளா உயர்நீதிமன்றம் விடுவித்தும், இந்த வழக்கை இரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு ஆண் மேலாடை இன்றி சுதந்திரமாக செயல்படும் இந்த நாட்டில் பெண்ணுக்கு அவ்வாறு செயல்பட உரிமைகள் மறுக்கப்படுவதென்பதை எப்படி பார்ப்பது. அதற்காக அனைத்து பெண்களும் அந்த உரிமையை விரும்பவில்லை. ஆனால் அப்படி விரும்பும் பெண்களுக்கு அந்த உரிமைகளை மறுப்பது எப்படி நியாயமாகும்?
ஒரு பெண்ணுக்கு தன்னுடைய உடல் மீது முழு சுதந்திரமும் அதிகாரமும் இருக்கிறது. அது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது.
அந்த வீடியோவில் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதென்பதை ஒரு கலையாக மட்டுமே அவர் காண்பிக்க விரும்புகிறார். அதில் கொச்சையாக எதுவும் இல்லை. அது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது.
ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான உறவென்பது ஒரு புனிதமான உறவு. அதை இங்கே எவராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு தாய் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதால் அந்த குழந்தையை எந்த விதத்திலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை.
ஒரு ஆண் குழந்தை தன் தாயின் மேலுடம்பை பார்த்து வளரும்போது, பிற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்பது பாத்திமா அவர்களின் வாதம். அது ஏற்புடையதும் கூட.
ஒரு பெண் தன் உடம்பை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு ஆணாதிக்க சமுதாயம் எப்படி முடிவு செய்ய முடியும்? அது அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ? அவளுக்கான சுதந்திரம் இல்லை என்றுதானே அர்த்தம்?
நீங்கள் கலாச்சார காவலர்களாக நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
காலவெள்ளத்திற்கு ஏற்ப கலாச்சாரம் தன்னை தகவமைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்கும். அதற்கு எவரின் காவலும் தேவையில்லை..
ஆண் பெண் அனைத்து விதத்திலும் சமம் என்பதை தினம்தினம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போல. அப்போதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்திற்குப் புரியுமோ ?
* தினேஷ்மாயா *
நான் இப்போது அதிகம் இங்கே எழுதுவதில்லை. நேரம் கிடைக்கவில்லை என்பது மட்டுமே காரணம். இன்னமும் அதே வேகம் இருக்கிறது. சிந்தனை மேலும் மெருகேறியிருக்கிறது, பார்வை விசாலமடைந்திருக்கிறது, எல்லாவற்றிலும் ஒரு தெளிவும் எதையும் புது கோணத்தில் அணுகும் ஆற்றலும் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
என் ஆசையெல்லாம், இப்போது ஓடுவதுபோல இல்லாமல், பொறுமையாக நகரும் வாழ்க்கை வேண்டும். அப்போது என் வலைப்பக்கத்தில் அதிகம் அதிகம் எழுதவேண்டும். அது விரைவில் நடந்தேறும்.
அதுவரை, நான் இங்கே எழுதினாலும் சரி எழுதாவிட்டாலும் சரி, அடிக்கடி என் வலைப்பக்கத்தை வந்து பார்த்துவிட்டு செல்லும் உங்களைப்போன்ற புனித ஆத்மாக்களுக்கு என் உளங்கனிந்த நன்றி !!!
எனக்காக இல்லாவிடினும், உங்களுக்காகவாவது இனி நான் அதிகம் எழுத முயல்கிறேன்.
* தினேஷ்மாயா *
தடைகள் ஏற்படும்போது, வாழ்வில் கடக்க முடியாத தருணங்கள் வரும்போது உண்மையான காதல் சரியான செயல்பாடுகள் வாயிலாக தானாகவே வெளிப்படும் !!
- From the movie "Hello Meera"
* தினேஷ்மாயா *
எல்லாம் ஒரு நாள் சரியாகிடும்
வசந்தம் நம் பக்கம் வீசும்
வாழ்க்கை இனிமையாகும்
முயற்சிகள் கைகூடும்
என்கிற நம்பிக்கையில்தான்
வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது..
நடக்கும்!!
நல்லதே நடக்கும் !!
* தினேஷ்மாயா *
சாக்ரடீஸை படியுங்கள் என்றபோது நீங்கள் கிரேக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை
கார்ல் மார்க்ஸை படியுங்கள் என்றபோது நீங்கள் யூதனா என்று கேள்வி எழுப்பவில்லை
ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஜெர்மானியனா என்று கேள்வி எழுப்பவில்லை
வ்ளாடிமிர் லெனினை படியுங்கள் என்றபோது நீங்கள் ரஷ்யனா என்று கேள்வி எழுப்பவில்லை
எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள் என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா என்று கேள்வி எழுப்பவில்லை
ஜான் லாக்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சுதந்திரவாதியா என்று கேள்வி எழுப்பவில்லை
ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள் என்றபோது நீங்கள் கியூபனா என்று கேள்வி எழுப்பவில்லை
நெல்சன் மண்டேலாவை படியுங்கள் என்றபோது நீங்கள் தென்ஆப்பிரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை
ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள் என்றபோது நீங்கள் அமெரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை
மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் நீக்ரோவா என்று கேள்வி எழுப்பவில்லை
சார்லஸ் டி கோளலை படியுங்கள் என்றபோது நீங்கள் பிரெஞ்சுக்காரனா என்று கேள்வி எழுப்பவில்லை
வில்லியம் வாலஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஸ்காடிஷ்ஸா என்று கேள்வி எழுப்பவில்லை
மாவோ சேதுங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சீனனா என்று கேள்வி எழுப்பவில்லை
ஆனால்.....
பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த,
உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்த,
15000 பக்கங்களை எழுதிய,
55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட,
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை வலியுறுத்திய,
காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய,
சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவிற்குள் போராடிய
“பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt)” அவர்களை படியுங்கள் என்றால் மட்டும்,
“ஏன் நீங்கள் தலித்தா” என்று மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது.!?
- படித்தில் எனக்கு பிடித்தது
* தினேஷ்மாயா *
காற்றோடு பட்டம் போல
இந்த காற்றோடு பட்டம் போல
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது
என்னிடம் வந்து சேருமா…?
ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்க்கை எப்போதும்
கண்ணாமூச்சியா…?
இந்த மண் மேலே இப்போது
நான் தான் சாட்சியா…?
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல
தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல
நீரிலே பூத்தாலும்
பூக்களின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ?
அன்பிலே அன்பிலே
இந்த மனம் வாடுதே
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லிலே பூவும் பூக்குதே
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
சின்னதொரு சோற்றைதானே
சிற்றெறும்பு கூடியே
தன்னுடைய வீட்டைநோக்கி
கொண்டு போகுமே
உள்ளபடி சொல்வதென்றால்
சிற்றெறும்பு போலக்கூட
சொந்தங்களை காக்கவில்லை
இங்கே நானுமே
கோயில்தான் போனாலும்
புண்ணியம் செய்தாலும்
என்னுடைய பாவம் தீருமோ
இந்த உலகில்
இன்றுதான் இன்றுதான்
என் முகத்தை பார்க்கிறேன்
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லையும் காலம் மாற்றுதே
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்க்கை எப்போதும்
கண்ணாமூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…?
திரைப்படம்: அயோத்தி
வரிகள்: சாரதி
இசை: N.R.ரகுநாதன்
குரல்: பிரதீப் குமார்
* தினேஷ்மாயா *
நல்லவர்கள் கூடும் போது
நன்மைகளும் கூடி போகும்
கண் இமைக்கும் நேரம் போதும்
எல்லாம் மாறுமே
புன்னகையின் வாசமின்றி
இன்று வரை பூமி மேலே
நிம்மதியில் வாழ்ந்ததாக
இல்லை யாருமே
துன்பமும் இன்பமும்
கற்றுத் தரும் காலமே
நம்பினால் யாவும் மாறுமே
நம்பு மனமே
உன்னையும் என்னையும்
ஒன்றிணைக்கும் வாழ்விலே
அன்புதான் பாலமாகுமே
அன்புதான் பாலமாகுமே…
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிராே
இன்று யார்யாரோ செய்த அன்பால்
நெஞ்சம் பூத்ததோ
எல்லா நாளுமே
விதை நெல்லாய் ஆகுமே
அன்பால் யாருமே பக்கம் வந்து
நின்றால் போதுமே
சிறு வெள்ளைத் தாள் மீது
பல வண்ணம் சேரும் போது
அங்கே தான் உண்டாகும்
தன்னால் மாற்றமே
இந்த நம்பிக்கை ஒன்றே தான்
நம்மை தேற்றுமே…
திரைப்படம்: அயோத்தி
வரிகள்: சாரதி
இசை: N.R.ரகுநாதன்
குரல்: சாய் விக்னேஷ்
படமும் சரி இந்த பாடலும் சரி, மனதை தொட்டுவிட்டது.
கண்களையும் குளமாக்கியது எனவும் சொல்லலாம்.
ரொம்ப நாள் கழிச்சு மனதை அதிகம் தாக்காமல் கனமாக்காமல் லேசாக வருடி அதே சமயம் கண்ணீரையும் தந்துவிட்டு சென்ற திரைப்படம்.
அன்பையும் மனிதத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு மனதும் மனிதரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இந்த வரிகள் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. உணர்வுபூர்வமான வரிகள் !!
* தினேஷ்மாயா *
உலகின் ஏதோ ஒரு ஓரத்தில்
யாரோ ஒருவரின் உருவத்தில்
“மனிதம்” எப்போதும்
வாழ்ந்துக்கொண்டேதான் இருக்கும்...
#அயோத்தி திரைப்படத்தின் வாயிலாக
இந்த உண்மையை
இந்த நம்பிக்கையை
மனதை தொடும் விதமாக விதைத்த
ஒட்டுமொத்த திரைப்பட குழுவிற்கும்
வாழ்த்துகள் கலந்த நன்றி !!
* தினேஷ்மாயா *
If I give you a gift, then it means
You're close to my heart.
If I give you a specially curated gift or my own painting, then it means
You're in my heart.
If I give you Buddha (Painting/Statue/or in any form) as gift, then it means
YOU'RE MY HEART !!
* DhineshMaya *
அன்பு ஒன்றே..
அது தங்கையிடம்
அன்னையிடம்
காதலியிடம்
தோழியிடம்
மனைவியிடம்
மகளிடம்
வெளிப்படுத்தும் விதம் மட்டுமே
மாறுகிறது...
வெளிப்படுத்தும் தன்மைக்கேற்ப
அன்பின் ஆழமும் மாறுபடுகிறது..
* தினேஷ்மாயா *
மனம் !!
அற்பானமதும்
அற்புதமானதும்
இரண்டின் கலவையே !!
* தினேஷ்மாயா *
அதிக அன்பின் வெளிப்பாடால் செய்யும் செயல்கள் சில சமயம் குற்றம் என்பதையும்தாண்டி பாவமாய் முடிந்திட வாய்ப்புள்ளதா என்ன !?
* தினேஷ்மாயா *
தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை
ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம்
எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில்
என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்
பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள்
இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான்
இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட
உதவும் விழி வழியே
படம்: தெறி
இசை: GV பிரகாஷ்
குரல்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: புலமைப்பித்தன்.
இந்த பாடலை இன்றுதான் முதலில் கேட்டேன். படம் பார்த்தபோதுகூட இந்த பாடல் மனதில் இடம் பிடிக்கவில்லை.
என்னவோ தெரியவில்லை, இந்த பாடலை முதலில் கேட்டதுமே கண்கள் நீரை சொரிந்தது.. ஆனந்தக்கண்ணீர் !!!
திருநாள் இந்த ஒருநாள் - இப்போது இந்த வரிகள்தான் என்னுடைய Mobile Ringtone...
இந்த வரிகள் அனைத்து உறவுக்கும், அனைத்து தருணத்திற்கும் பொருத்தமாய் இருப்பதாக நான் உணர்கிறேன்..
* தினேஷ்மாயா *
கற்ற கல்வியை பிறரோடு பகிர்ந்தபோது..
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டதாய் உணர்கிறேன்.
* தினேஷ்மாயா *
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார். அவரின் வரிகளுக்கேற்ப, நான் வளர வளர என் அறிவும் வளர்வதை நான் உணர்கிறேன். படிப்பறிவும், பட்டறிவும் என்னை வளர்ப்பதை உணர்கிறேன்.
என் சிந்தனைகள் நன்னெறிப்படுவதையும், செயலும் அவ்வாறாக பயணப்படுவதையும் உணர்கிறேன். கோபம் குறைந்திருக்கிறது. பொதுவாகவே எனக்கு கோபம் வராது. எப்போதாவது வரும் கோபமும் குறைந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் உற்று கவனித்து அனுபவித்து நானும் நகர்கிறேன். பொதுவாகவே பொறுமைசாலியான நான், இப்போது மிகவும் பொறுமையை கடைப்பிடிக்கிறேன். அவசர அவசரமாக செயல்படாமல், நின்று நிதானமாய் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்வதாய் உணர்கிறேன்.
என் சிந்தனைகள் புதுமையான பாதையில் என்னை அழைத்து செல்வதையும், அங்கே நான் பல கேள்விகளை எழுப்பி, நானே என்னையும், நான் கண்டது கேட்டது என அனைத்தையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி அதற்கான விடையையும் காண்கிறேன்.
என் சிந்தனையின் வாழ்க்கைப் பயணத்தை இங்கே கொஞ்சம் அசைப்போட விரும்புகிறேன்.
நானும் சிறுவயது முதலே இறை நம்பிக்கை கொண்ட மனிதனாகவே இருந்தேன். 2020-ம் ஆண்டுவரையிலும்கூட ஒரு பக்திமானாக இருந்தவன். முருகன் பிடிக்கும். அண்ணாமலையாரை என் அப்பனாகவே பாவித்து வந்தவன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை கிரிவலம் சென்றவன். என் வலைப்பக்கத்தில் இருக்கும் முந்தைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் என் பக்தியின் ஆழம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சார்லஸ் டார்வின் சொல்வது போல Evolution எனக்குள் துவங்கியது. Buddha, Confucius, Aristotle, Socrates, Plato, Periyar, Ambedkar, Karl Marx, Voltaire, Rousseau, Machiavelli, Friedrich Nietzsche, Richard Dawkins, Charles Darwin, Sigmund Freud, Arignar Anna இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களின் தத்துவங்களை படிக்கவும் கேட்கவும் வாய்ப்பு அமைந்தது (Lockdown சமயத்தில்)
இவர்களின் படைப்புகள் அனைத்தையும் நான் படிக்கவில்லையென்றாலும், அவர்களின் சித்தாந்தங்களை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நிறைய படிக்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மாறத்துவங்கினேன். என் நம்பிக்கைகளை நானே கேள்வி கேட்கத் துவங்கினேன். முதலில் அடிப்பட்டது என் இறை நம்பிக்கை. இதுநாள் வரை - சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இறைவனைத் தேடி பல பாதைகளில் பயணப்பட்டிருக்கிறேன். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், சித்தர் வழிபாடு மார்க்கம், இப்படி பல பாதகள். அனைத்திலும் தேடிக்கிடைக்காத இறைவன், நான் என்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்துவிட்டான். ஆம். இறைவன் என்னுள் இருக்கிறான் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. என் இறை பயணத்தில் கிடைத்த அனுபவமும், மேற்கூறிய சிந்தனையாளர்களின் சீறிய சிந்தனைகளும் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.
கடவுள் என்ற ஒருவர் இல்லை என்கிற உண்மைதான் அது. ஒருவர் தன் நம்பிக்கைக்கு உருவம் கொடுத்தோ/கொடுக்காமலோ ஒரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். அதுவே கடவுள்.
என் நண்பர்கள் / குடும்பத்தார் மத்தியில் நான் தீவிர ஆன்மீகவாதியாக அறியப்பட்டவன். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளாக நாத்திகனாக மாறியதாக அவர்கள் உணர்கிறார்கள். ஒருமுறை என் நண்பன் கேட்டான்.
மச்சி.. உனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை இருக்கா ? என்று.
நான் சொன்னேன். கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான் என்று. நான் சொன்னது அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்காச்சும் புரிகிறதா !!
இயற்கை எனக்குக் கொடுத்த பாலினம் - ஆண் என்கிற அடையாளம். எனக்கு சூட்டப்பட்ட பெயர் பிறர் என்னை அடையாளம் கண்டுக்கொள்ள. அதைத்தவிர, என் மீது திணிக்கப்பட்ட சாதி, மதம், இனம் இவ்வாறான அடையாளங்களால் நான் அறியப்பட விரும்பவில்லை. அது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா ?
இங்கே பிறக்கும் அனைத்து மனித குழந்தைகளும் நாத்திகராகவே பிறக்கின்றன. சாதி மதம் இனம் இப்படி எதுவும் அறியாத குழந்தைகள். அவற்றிற்கு சாதியை திணித்து, மதத்தை புகுத்தி அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் நாமே ஒரு கோடு போட்டு அதில் நடக்க சொல்கிறோம். நாமும் சுயமாக சிந்திப்பதில்லை, நம் குழந்தைகளையும் சுயமாக சிந்திக்க விடுவதில்லை.
ஆயிரம் கிலோ எடைக்கொண்ட ஒரு கல்லை எந்த மனிதனாலும் தூக்க முடியாது. இது நம் அறிவுக்கு நன்கு தெரியும். ஆயினும், அனுமன் ஒரு மலையையே தன் கையால் தூக்கிக்கொண்டு பறந்தான் எனவும், கண்ணன் தன் சுண்டுவிரலால் ஒரு மலையையே தூக்கி நிறுத்தினான் என்பதையும் இங்கே மக்கள் நம்பவே செய்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை. தெய்வகுற்றம் ஆகிவிடும் என்று அச்சமோ !
அனைத்து மதங்களிலும் மூடநம்பிக்கை பரவிக்கிடக்கிறது. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறதென்றால், இந்நேரம் உலகமே ஒரு சொர்க்க பூமியாக மாறியிருக்க வேண்டுமே ! ஏன் அப்படி இல்லை ?
இங்கே மதம், சாதி, இனம், மொழி என பல பிரிவினைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவை ஒரு வகைப்படுத்துதலுக்காக மட்டுமே பயன்பட்டாலும், இன்று அவற்றை மையமாக வைத்து உலகம் முழுவதும் பல அரசியல் நடக்கிறது. அதில் பெரும்பாலான மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். அவர்கள் சிக்கியிருப்பது ஒரு மாயவலை என்பதை அறியாவண்ணம் இருக்கின்றனர்.
அவற்றில் இருந்து வெளியே வாருங்கள். நாம் அனைவரும் மனிதர்கள். , நமக்கு கிடத்த அடையாளங்கள் அல்லது திணிக்கப்பட்ட அடையாளங்களை விட்டு வெளியேறுங்கள். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை மட்டுமே விதைப்போம். அன்பையே அறுவடை செய்வோம். அன்பை பரிமாறிக்கொள்வோம்.
அன்பு பேரன்பாக மாறும்போது நீங்கள் தேடும் அந்த இறைவன் உங்களிடம் வந்திருப்பான். நான் இறைவனை தேடியதில் எனக்கு கிடைத்தது இரண்டு.
1. இறைவன் இல்லை என்கிற உண்மை !!
2. இறைவனை அடைவதைவிடுத்து நானே இறைத்தன்மையை அடைந்தது !!
அன்பே சிவம் என்கிறார் திருமூலர் சித்தர்.
அன்பே உங்கள் பிரதான கொள்கையாக இருக்கும்போது, நீங்களே அந்த சிவனாக மாறிவிடுவீர்கள்.
நான் சொன்னது கொஞ்சமாச்சும் புரிந்ததா !?
புரிந்தால் மகிழ்ச்சி.
புரியவில்லையென்றாலும் மகிழ்ச்சி.
இதில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் மகிழ்ச்சி.
ஆனால், நான் சொன்னதை புரிந்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் வாருங்கள். விவாதிப்போம். கலந்து பேசுவோம். என்னால் முடிந்தவரை என் அறிவையும் அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன். நான் இருக்கும் பேரின்ப நிலையை நீங்களும் அடைய உதவுகிறேன்.
- பேரன்புடன்
* தினேஷ்மாயா *
நான் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொரும் எதையாவது எனக்கு கற்றுகொடுத்துள்ளனர்.
நான் கற்றதில் சரிபாதி இயற்கையும், விலங்குகளும், பூச்சிகளும், மரங்களும், பூக்களும் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளன.
என்னை நன்னெறிப்படுத்திய (மேற்கூறிய) அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள் 🖤❤️💙
* தினேஷ்மாயா *
ஆழ்மனம் சொல்வது பல நேரங்களில் நடந்துவிடுமல்லவா. அப்படியான ஒரு உணர்வு எனக்கு இப்போது எழுகிறது.
26.08.2022
இன்றைய தினம் என் அலுவலகத்தில், துறை ரீதியான தேர்விற்கு தயாராகும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நான் வகுப்பு எடுக்கிறேன். நான் பல ஆண்டுகளாக எண்ணற்ற நபர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். ஆனால் அது ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 முதல் 15 நபர்களுக்கு எடுத்திருப்பேன். அதிலும் பெரும்பாலானவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி பாடம் நடத்தியிருக்கிறேன்.
ஆனால், இன்றோ நான் அறிந்திராத 100-க்கும் மேலான நபர்களுக்கு வகுப்பு எடுக்கப்போகிறேன். இந்த நாள் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமென என் ஆழ்மனம் சொல்கிறது.
சில மாதங்களாக, என் அலுவலக நண்பர்கள் சுமார் 15 பேருக்கு நான் வகுப்பு எடுத்து வருகிறேன். அதிலிருந்து ஒருவர் சொன்னார், Sir your teaching is so good and unique என்று. அது எனக்கு மிகவும் மன நிறைவாக இருந்தது. அது எனக்கு மேலும் உத்வேகத்தை தந்திருக்கிறது.
எனக்கு நினைவு தெரிந்து நான் எட்டாவது படிக்கும் காலத்திலிருந்தே என் நண்பர்களுக்கு கணக்குப் பாடம் எடுத்து வருகிறேன். 2002-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை எதோ வகையில் நான் பிறருக்கு எதையாவது கற்பித்துக்கொண்டே இருந்திருக்கிறேன், இருக்கிறேன். இதுவரை இந்த 20 வருட பயணத்தில் குறைவான நபர்களுக்கு மட்டுமே கற்பித்து வந்துள்ளேன். அது இன்று முதல் மிகப்பெரிய பயணத்தை நான் மேற்கொள்ள ஒரு தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நான் உணர்கிறேன்.
பிறருக்கு கற்பிக்க வேண்டுமென்பதால் நானும் அதிகம் படிக்கிறேன். அது என் அறிவையும் மெருகேற்றுகிறது. கற்று மகிழ்ந்து கற்பித்தும் மகிழ்கிறேன்.
* தினேஷ்மாயா *
அதிகாரம் இருக்குமிடத்தில் அன்பு இருக்காது..
உண்மையே..
ஆனால் கணவன் மனைவி உறவு ஒரு விதிவிலக்கு..
அங்கே அன்பினால் வரும் அதிகாரமே அதிகம்.
வள்ளுவனும்கூட "அன்பை" அதிகாரமொன்றில் தானே வைத்திருக்கிறார் !!
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..