நான் யார் ?

Wednesday, September 14, 2022



 ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார். அவரின் வரிகளுக்கேற்ப, நான் வளர வளர என் அறிவும் வளர்வதை நான் உணர்கிறேன். படிப்பறிவும், பட்டறிவும் என்னை வளர்ப்பதை உணர்கிறேன்.

    என் சிந்தனைகள் நன்னெறிப்படுவதையும், செயலும் அவ்வாறாக பயணப்படுவதையும் உணர்கிறேன். கோபம் குறைந்திருக்கிறது. பொதுவாகவே எனக்கு கோபம் வராது. எப்போதாவது வரும் கோபமும் குறைந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் உற்று கவனித்து அனுபவித்து நானும் நகர்கிறேன். பொதுவாகவே பொறுமைசாலியான நான், இப்போது மிகவும் பொறுமையை கடைப்பிடிக்கிறேன். அவசர அவசரமாக செயல்படாமல், நின்று நிதானமாய் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்வதாய் உணர்கிறேன்.

என் சிந்தனைகள் புதுமையான பாதையில் என்னை அழைத்து செல்வதையும், அங்கே நான் பல கேள்விகளை எழுப்பி, நானே என்னையும், நான் கண்டது கேட்டது என அனைத்தையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி அதற்கான விடையையும் காண்கிறேன்.

என் சிந்தனையின் வாழ்க்கைப் பயணத்தை இங்கே கொஞ்சம் அசைப்போட விரும்புகிறேன். 

நானும் சிறுவயது முதலே இறை நம்பிக்கை கொண்ட மனிதனாகவே இருந்தேன். 2020-ம் ஆண்டுவரையிலும்கூட ஒரு பக்திமானாக இருந்தவன். முருகன் பிடிக்கும். அண்ணாமலையாரை என் அப்பனாகவே பாவித்து வந்தவன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை கிரிவலம் சென்றவன். என் வலைப்பக்கத்தில் இருக்கும் முந்தைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் என் பக்தியின் ஆழம். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சார்லஸ் டார்வின் சொல்வது போல Evolution எனக்குள் துவங்கியது. Buddha, Confucius, Aristotle, Socrates, Plato, Periyar, Ambedkar, Karl Marx, Voltaire, Rousseau, Machiavelli, Friedrich Nietzsche, Richard Dawkins, Charles Darwin, Sigmund Freud, Arignar Anna இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களின் தத்துவங்களை படிக்கவும் கேட்கவும் வாய்ப்பு அமைந்தது (Lockdown சமயத்தில்)

இவர்களின் படைப்புகள் அனைத்தையும் நான் படிக்கவில்லையென்றாலும், அவர்களின் சித்தாந்தங்களை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நிறைய படிக்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மாறத்துவங்கினேன். என் நம்பிக்கைகளை நானே கேள்வி கேட்கத் துவங்கினேன். முதலில் அடிப்பட்டது என் இறை நம்பிக்கை. இதுநாள் வரை - சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இறைவனைத் தேடி பல பாதைகளில் பயணப்பட்டிருக்கிறேன். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், சித்தர் வழிபாடு மார்க்கம், இப்படி பல பாதகள். அனைத்திலும் தேடிக்கிடைக்காத இறைவன், நான் என்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்துவிட்டான். ஆம். இறைவன் என்னுள் இருக்கிறான் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. என் இறை பயணத்தில் கிடைத்த அனுபவமும், மேற்கூறிய சிந்தனையாளர்களின் சீறிய சிந்தனைகளும் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

கடவுள் என்ற ஒருவர் இல்லை என்கிற உண்மைதான் அது. ஒருவர் தன் நம்பிக்கைக்கு உருவம் கொடுத்தோ/கொடுக்காமலோ ஒரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். அதுவே கடவுள்.

என் நண்பர்கள் / குடும்பத்தார் மத்தியில் நான் தீவிர ஆன்மீகவாதியாக அறியப்பட்டவன். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளாக நாத்திகனாக மாறியதாக அவர்கள் உணர்கிறார்கள். ஒருமுறை என் நண்பன் கேட்டான்.

மச்சி.. உனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை இருக்கா ? என்று.

நான் சொன்னேன். கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான் என்று. நான் சொன்னது அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்காச்சும் புரிகிறதா !!

இயற்கை எனக்குக் கொடுத்த பாலினம் - ஆண் என்கிற அடையாளம். எனக்கு சூட்டப்பட்ட பெயர் பிறர் என்னை அடையாளம் கண்டுக்கொள்ள. அதைத்தவிர, என் மீது திணிக்கப்பட்ட சாதி, மதம், இனம் இவ்வாறான அடையாளங்களால் நான் அறியப்பட விரும்பவில்லை. அது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா ?

இங்கே பிறக்கும் அனைத்து மனித குழந்தைகளும் நாத்திகராகவே பிறக்கின்றன. சாதி மதம் இனம் இப்படி எதுவும் அறியாத குழந்தைகள். அவற்றிற்கு சாதியை திணித்து, மதத்தை புகுத்தி அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் நாமே ஒரு கோடு போட்டு அதில் நடக்க சொல்கிறோம். நாமும் சுயமாக சிந்திப்பதில்லை, நம் குழந்தைகளையும் சுயமாக சிந்திக்க விடுவதில்லை.

ஆயிரம் கிலோ எடைக்கொண்ட ஒரு கல்லை எந்த  மனிதனாலும் தூக்க முடியாது. இது நம் அறிவுக்கு நன்கு தெரியும். ஆயினும், அனுமன் ஒரு மலையையே தன் கையால் தூக்கிக்கொண்டு பறந்தான் எனவும், கண்ணன் தன் சுண்டுவிரலால் ஒரு மலையையே தூக்கி நிறுத்தினான் என்பதையும் இங்கே மக்கள் நம்பவே செய்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை. தெய்வகுற்றம் ஆகிவிடும் என்று அச்சமோ !

அனைத்து மதங்களிலும் மூடநம்பிக்கை பரவிக்கிடக்கிறது. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறதென்றால், இந்நேரம் உலகமே ஒரு சொர்க்க பூமியாக மாறியிருக்க வேண்டுமே ! ஏன் அப்படி இல்லை ?

இங்கே மதம், சாதி, இனம், மொழி என பல பிரிவினைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவை ஒரு வகைப்படுத்துதலுக்காக மட்டுமே பயன்பட்டாலும், இன்று அவற்றை மையமாக வைத்து உலகம் முழுவதும் பல அரசியல் நடக்கிறது. அதில் பெரும்பாலான மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். அவர்கள் சிக்கியிருப்பது ஒரு மாயவலை என்பதை அறியாவண்ணம் இருக்கின்றனர்.

அவற்றில் இருந்து வெளியே வாருங்கள். நாம் அனைவரும் மனிதர்கள். , நமக்கு கிடத்த அடையாளங்கள் அல்லது திணிக்கப்பட்ட அடையாளங்களை விட்டு வெளியேறுங்கள். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை மட்டுமே விதைப்போம். அன்பையே அறுவடை செய்வோம். அன்பை பரிமாறிக்கொள்வோம். 

அன்பு பேரன்பாக மாறும்போது நீங்கள் தேடும் அந்த இறைவன் உங்களிடம் வந்திருப்பான். நான் இறைவனை தேடியதில் எனக்கு கிடைத்தது இரண்டு.

1. இறைவன் இல்லை என்கிற உண்மை !!

2. இறைவனை அடைவதைவிடுத்து நானே இறைத்தன்மையை அடைந்தது !!

அன்பே சிவம் என்கிறார் திருமூலர் சித்தர்.

அன்பே உங்கள் பிரதான கொள்கையாக இருக்கும்போது, நீங்களே அந்த சிவனாக மாறிவிடுவீர்கள்.

நான் சொன்னது கொஞ்சமாச்சும் புரிந்ததா !?

புரிந்தால் மகிழ்ச்சி.

புரியவில்லையென்றாலும் மகிழ்ச்சி.

இதில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் மகிழ்ச்சி.

ஆனால், நான் சொன்னதை புரிந்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் வாருங்கள். விவாதிப்போம். கலந்து பேசுவோம். என்னால் முடிந்தவரை என் அறிவையும் அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன். நான் இருக்கும் பேரின்ப நிலையை நீங்களும் அடைய உதவுகிறேன்.

- பேரன்புடன்

* தினேஷ்மாயா * 

ஆசிரியர் தினம்

Monday, September 05, 2022

 நான் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொரும் எதையாவது எனக்கு கற்றுகொடுத்துள்ளனர்.


நான் கற்றதில் சரிபாதி இயற்கையும், விலங்குகளும், பூச்சிகளும், மரங்களும், பூக்களும் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளன. 


என்னை நன்னெறிப்படுத்திய (மேற்கூறிய) அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள் 🖤❤️💙


* தினேஷ்மாயா *

26.08.2022

Thursday, August 25, 2022

 ஆழ்மனம் சொல்வது பல நேரங்களில் நடந்துவிடுமல்லவா. அப்படியான ஒரு உணர்வு எனக்கு இப்போது எழுகிறது.

26.08.2022

இன்றைய தினம் என் அலுவலகத்தில், துறை ரீதியான தேர்விற்கு தயாராகும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நான் வகுப்பு எடுக்கிறேன். நான் பல ஆண்டுகளாக எண்ணற்ற நபர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். ஆனால் அது ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 முதல் 15 நபர்களுக்கு எடுத்திருப்பேன். அதிலும்  பெரும்பாலானவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி பாடம் நடத்தியிருக்கிறேன்.

ஆனால், இன்றோ நான் அறிந்திராத 100-க்கும் மேலான நபர்களுக்கு வகுப்பு எடுக்கப்போகிறேன். இந்த நாள் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமென என் ஆழ்மனம் சொல்கிறது. 

சில மாதங்களாக, என் அலுவலக நண்பர்கள் சுமார் 15 பேருக்கு நான் வகுப்பு எடுத்து வருகிறேன். அதிலிருந்து ஒருவர் சொன்னார், Sir your teaching is so good and unique என்று. அது எனக்கு மிகவும் மன நிறைவாக இருந்தது. அது எனக்கு மேலும் உத்வேகத்தை தந்திருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்து நான் எட்டாவது படிக்கும் காலத்திலிருந்தே என் நண்பர்களுக்கு கணக்குப் பாடம் எடுத்து வருகிறேன். 2002-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை எதோ வகையில் நான் பிறருக்கு  எதையாவது கற்பித்துக்கொண்டே இருந்திருக்கிறேன், இருக்கிறேன். இதுவரை இந்த 20 வருட பயணத்தில் குறைவான நபர்களுக்கு மட்டுமே கற்பித்து வந்துள்ளேன். அது இன்று முதல் மிகப்பெரிய பயணத்தை நான் மேற்கொள்ள ஒரு தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நான் உணர்கிறேன்.

பிறருக்கு கற்பிக்க வேண்டுமென்பதால் நானும் அதிகம் படிக்கிறேன். அது என் அறிவையும் மெருகேற்றுகிறது. கற்று மகிழ்ந்து கற்பித்தும் மகிழ்கிறேன்.

 * தினேஷ்மாயா *

வள்ளுவனும்

Monday, May 09, 2022

அதிகாரம் இருக்குமிடத்தில் அன்பு இருக்காது..

உண்மையே..

ஆனால் கணவன் மனைவி உறவு ஒரு விதிவிலக்கு..

அங்கே அன்பினால் வரும் அதிகாரமே அதிகம்.

வள்ளுவனும்கூட "அன்பை" அதிகாரமொன்றில் தானே வைத்திருக்கிறார் !!

* தினேஷ்மாயா *


ஏழாம் சுவை

தன்மானத்தின் சுவை அறிந்தவன்

ஒருபோதும் பட்டினியால் வாடுவதில்லை..

* தினேஷ்மாயா *

பெருந்தன்மை

Monday, January 24, 2022

இப்போதெல்லாம் பெருந்தன்மை என்கிற உயர்குணம் இங்கே மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுவதில்லை. நவநாகரிகம் என்கிற பெயரில் நம்மிடையே ஊடுருவிவிட்ட கலாச்சாரத்தின் பின்விளைவினாலேயே பெருந்தன்மை என்கிற உயர்குணம் கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூகத்திலிருந்து மறைந்து வருகிறது. 

இக்குணம், பெரும்பாலும் வயது மற்றும்/அல்லது அறிவு (அ) அனுபவம் முதிர்ச்சியால் ஒருவருக்குள் இருக்கும். ஆனால் வயது/அறிவு/அனுபவத்தில் முதிர்ந்த அனைவருக்கும் பெருந்தன்மை இருப்பதில்லை என்பது வேறு கதை. பொதுவாக, இவற்றில் முதிர்ச்சி அடைந்த மக்கள் பெருந்தன்மை குணத்தோடு விளங்குவர்.

இந்த உலக வாழ்க்கையையே வெறுமனே போட்டிகள் மற்றும் நிறைந்த ஒன்றாக, வெற்றி/தோல்வி என்கிற இலக்கை மட்டுமே வைத்து ஓடக்கூடிய ஒன்றாக இச்சமூகம் மாற்றிவிட்டது. இச்சூழலில், இந்த உலகில் பெருந்தன்மையாக வாழ்வதென்பது முட்டாள்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று என்று வாதிடும் மக்களையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.

அவர்களின் கூற்றுக்களை ஏற்கவியலாது. நாம் இங்கே வந்திருப்பது வாழ்வதற்காக. அந்த வாழ்க்கையில் நீங்களும் கொஞ்சம் பெருந்தன்மையோடு வாழ்ந்துப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டானதாய் உணர்வீர், நீங்களும் மனநிம்மதியை உணர்வீர்.

இங்கே ஒரு முதுமொழியை குறிப்பிட விளைகிறேன்.

“ விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.”

*தினேஷ்மாயா*

RGB

Thursday, January 20, 2022

 Rules the Break !

- DM

Do Anything

 Do anything -

That doesn't hurt others

And also

Makes you Happy  !!

Your choice

Yes..

It's true. 

Pain is obvious

But 

Suffering is optional. 

-DM

Perfect

 If you think youre perfect...

WTF !!

Well... That's  Fine !!


If you think only you're perfect and no one else is..

WTF

What The F !!

* DM*

My favourite drug

 Loneliness is my favourite Drug

* DhineshMaya *

பிரபஞ்ச அழகி

Saturday, December 25, 2021

 உலக அழகி சரி.

அதென்ன பிரபஞ்ச அழகி ?

ஏன் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைத்து அழகிகளும் இந்த உலகத்தில் இருந்து மட்டுமே வருகின்றனர் ? பிரபஞ்சத்தில் எத்தனையோ அழகிகள் இருக்கலாம்..

இந்த குறுகிய மனப்பான்மையை மனிதன் மாற்றிக்கொள்வானா ?


* தினேஷ்மாயா *

பெரியாரியம்


* தினேஷ்மாயா *

வானும் மண்ணும்



ஒரு பறவை

வானிற்கும் இந்த மண்ணிற்கும் இடையே

பறந்துக்கொண்டே இருக்க -

அது நம் நினைவுகள்தாம்

என மனம் அறியாதோ !

மேலே வானமாய் நீ

கீழே மண்ணாய் நான்..

* தினேஷ்மாயா *

முடிவில்லா காவியம்

 


கையில்லா ரவிக்கை !!

கட்டுப்பாடில்லா என் மனம் !!!

முடிவில்லா காவியமாய் நம்

ஊடலும் கூடலும் !

* தினேஷ்மாயா *

விண்ணுலக தேவதை

 


விளக்கொளியில் கண்டேன்

விண்ணுலக தேவதையை !!


* தினேஷ்மாயா *

சிறைப்பட்ட மனிதன்


மண்புழுக்கள்கூட தன்

உடலை இழுத்து

இழுத்துக்கொண்டு ஓர்

இடம்விட்டு மற்றோர் இடம்

ஊர்ந்துகொண்டுதான்

இருக்கின்றன.

மனிதர்கள் மட்டும்தான்,

தன் இருப்பிடத்துக்கு வெளியே

உலகம் இல்லை என்று

நினைக்கிறார்கள்..


- மறைக்கப்பட்ட இந்தியா நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்


* தினேஷ்மாயா *

In Science We Trust !!

 

அறிவியலே கடவுள்

ஆன்மிகத்தில் ஓடி கடவுளைத் தேடினேன்.. 

கிடைக்கவில்லை..

அறிவியலை நாடி கடவுளைத் தேடினேன்..

கண்டுகொண்டேன்....

In Science We Trust !!

* தினேஷ்மாயா *

ஈ.வே.ரா

பெரியார்

அனைவரும் இங்கே சமம்.  நீ வேறா நான் வேறா இருக்கக் கூடாது என்று நினைத்தவரே எங்கள் ஈ.வே.ரா..

- படித்ததில் பிடித்தது -

* தினேஷ்மாயா *

தலைகோதும் இளங்காத்து..


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையிலே

பாத உண்டாகும்


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


நீல வண்ண கூர இல்லாத

நிலமிங்கு ஏது

காலம் எனும் தோழன் உன்னோடு

தடைகள் மீறு


மாறுமோ தானா நிலை

எல்லாமே தன்னாலே

போராடு நீயே

ஆறம் உண்டாகும் மண்மேலே


மீதி இருள் நீ கடந்தால்

காலை ஒளி வாசல் வரும்

தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்

நமக்கான நாள் வரும்


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையிலே

பாத உண்டாகும்


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


படம்: ஜெய்பீம்

வரிகள் : ராஜூமுருகன்

குரல்: பிரதீப் குமார்

இசை: ஷான் ரோல்டன்


பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தன்னம்பிக்கையூட்டும் பாடல் என் மனதை தொட்டிருக்கிறது. இசை, வரிகள், குரல் எல்லாம் கச்சிதமாக பொருந்தி என் மனதில் தென்றலாய் வருடிச்செல்கிறது. Loop-ல் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இந்தப்பாடலை.


* தினேஷ்மாயா *

Homo sapiens

Thursday, December 23, 2021

 

Dear Mother Nature,

Homo sapiens is a failure model..

- DhineshMaya

இதுவும் கடந்து போகும் !!!

Friday, October 08, 2021


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்....


சுடரி இருளில் ஏங்காதே

வெளிதான் கதவை மூடாதே.. அட

ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே..

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே..


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  

ஏதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே...

அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே...


நாள்தோரும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்...


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே...

மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே...


வசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாக பார்த்திடுமே...


சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே...

பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே...


சுடரி சுடரி... வெளிச்சம் தீராதே....

அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே...

அழகே சுடரி அட ஏங்காதே...

மலரின் நினைவில் மனம் வாடாதே....


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

கடந்து போகும் கடந்து போகும் .


படம்: நெற்றிக்கண்

வரிகள்: கார்த்திக் நேத்தா

குரல்: சிட் ஸ்ரீராம்

இசை:  கிரீஷ்


ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் மீண்டும் கேட்கும்படியான ஒரு மெலடி. வரிகளும் power packed. கதையின் சூழ்நிலைக்கேற்ப அருமையான வரிகள். நாமும் நம் வாழ்வின் சில தருணங்களில் மனசு உடைந்து நொறுங்கிக்கிடக்கும் சமயம் இந்த பாடலும் வரிகளும் கேட்கும்போது மழைக்கால ஈரத்தென்றல் வந்து நம் மனதை வருடிவிட்டு அந்த வலியையும் கொஞ்சம் சுமந்து செல்வதாய் உணரலாம்.


* தினேஷ்மாயா * 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்

கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?


வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்

வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

ஆடிக் காட்ட மாட்டாயா?


அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே

அறிகிலாத போது - யாம்

அறிகிலாத போது - தமிழ்

இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்

இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ

இயம்பிக் காட்ட மாட்டாயா?


புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் - நல்

திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்

செல்வம் ஆக மாட்டாயா?


- பாரதிதாசன் -

இந்த வரிகளை பாடல்களாக கேட்டுப்பாருங்கள். அற்புதமாக இருக்கும். Youtube-ல் நிறைய பேர் பாடியுள்ளனர். ஓர் இரவு என்னும் பழைய தமிழ் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

* தினேஷ்மாயா *

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

என்னை கலி தீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

என்னை கலி தீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே


பிள்ளை கனி அமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமேஏ

பிள்ளை கனி அமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமேஏ

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேரேஏ

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேரேஏ


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே


ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஆடி திரிதல் கண்டால் உனை போய்

ஆவி தழுவுதடீ

ஆடி திரிதல் கண்டால் உனை போய்

ஆவி தழுவுதடீ


உச்சி தன்னை முகர்ந்தால்

கர்வம் ஓங்கி வளருதடீ

உச்சி தன்னை முகர்ந்தால்

கர்வம் ஓங்கி வளருதடீ

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ


கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடிஏ

உன்னை தழுவிடலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடிஏ

உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம்

உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ


- பாரதியாரின் கண்ணன் பாட்டிலிருந்து -


அருமையான வரிகள். தமிழ் கர்நாடிக் இசைக்கச்சேரிகளில் நிச்சயம் இந்த பாடல் இடம்பிடித்திடும். இப்பாடல் நிறைய versions-ல் இருக்கிறது. எதாவது ஒரு version-ஐ கேட்டுப்பாருங்களேன். மனம் அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.

* தினேஷ்மாயா *

தேவதை ?!?!

Wednesday, September 29, 2021

 துன்பத்தில் இருக்கும்போது வராத தேவதைகள்,

மீளாத்துயிலில் சென்றப்பிறகு,

உயிரை ஏந்திச்செல்ல வருவது -

எதற்காக ?

* தினேஷ்மாயா *

கையறுநிலை

எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில்


மனிதனும் மனிதமும் தோற்றுப்போவதை உணரமுடிகிறது..


* தினேஷ்மாயா *

வெறுமை

வாழ்க்கை வெறுமைகளால் நிரம்பியிருக்க,


அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழ்ச்சியானத் தருணங்கள் எப்போதாவது தென்படுகின்றன..

* தினேஷ்மாயா *

புதிய தலைமுறை

Thursday, September 23, 2021

 ஒரு நாவலை எடுத்தால் அதை படித்து முடிக்கும்வரை உணவோ உறக்கமோ வராது. புத்தக வாசிப்பிலேயே புதியதோர் உலகிற்கு பயணித்து புதியதோர் வாழ்க்கை அனுபவத்தைப் பெறும் அந்த  அதிஅற்புதமான உணர்வை..


Netflix, Amazon Prime என இணையத்தில், தூக்கம் கெட்டு தொடர்ச்சியாக படங்கள் பார்க்கும் இக்கால தலைமுறையினர் உணர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்..


* தினேஷ்மாயா *

தன்னிகரற்ற தலைவர் - பெரியார்

 பெரியாருக்கு முன்னர் உலகில் பல்வேறு பகுத்தறிவுவாதிகள் தோன்றி, பெரியாரைவிடவும் சிறந்த கருத்துகளை மக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அத்துனைப்பேரும் சிந்தனைவாதிகளாகவே நினைவுக்கூறப்படும் வேளையில், பெரியார் மட்டுமே ஒரு இனத்தின் தலைவராக போற்றப்படுகிறார். அவர், வெறும் சொல்லோடு நிற்காமல் செயலிலும் தன் சித்தாந்தத்தை இறுதிவரை கடைப்பிடித்து பகுத்தறிவின் அகராதியாக திகழ்வதே அதற்கான காரணம்..

🤍


* தினேஷ்மாயா *

மதம் மனிதனை மிருகமாக்கும்

 இலங்கையில் புத்தரின் பல், புத்தரின் எலும்பு என்று அவர் நினைவாக பல பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அந்த பொருட்கள் உண்மையாகவே புத்தருடையதுதானா என்கிற விவாதம் இருக்கட்டும். 

ஆனால், புத்தரின் நினைவாக என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு, அவர் போதித்த அன்பையும் மனிதநேயத்தையும் மறந்து தன் மக்களையே வஞ்சிக்கும் கொடிய தேசமாய் இலங்கை விளங்குவது வேதனையே..

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இலங்கையில் சுமார் 70% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். ஒரு புத்த நாடாக இருக்கும் இலங்கையில் ஏன் இத்தனை போர், கலவரம், அமைதியின்மை என்று சிந்தித்தால், பெரியார் சொன்ன ஒரு வாசகமே மனதில் தோன்றுகிறது.

”மதம் மனிதனை மிருகமாக்கும்”

என்னது ? புத்த மதம் கூடவா? சமண மதம் கூடவா ? என்று பலர் உங்கள் புருவத்தை உயர்த்துவது எனக்குத் தெரிகிறது. ஆம். அனைத்து மதங்களுமே மனிதனை மிருகமாக்கும்.

புத்தர் போதித்த கருத்துகளை வாழ்வியலுக்குப் பொருத்திப்பார்த்து வாழ்வதை விடுத்து, அவற்றையும் இன்னபிற கதைகளையும் தொகுத்து புத்தத்தை மதமாக உருவாக்கியதன் விளைவே இது. மதம் என்று எப்போது ஒன்று உருவெடுக்கிறதோ அங்கே மனிதநேயம் மறைந்தேப்போகிறது.

சமணமும்கூட, தீர்த்தங்கரர்கள் மக்களை நல்வழிப்படுத்த போதித்த கருத்துகளை மறந்து அந்த தீர்த்தங்கரர்களையே தெய்வமாக வழிப்படத்தொடங்கி இன்று ஒரு மதமாக வளர்ந்து நிற்கிறது. 

இதனால்தான் பெரியார் சொல்லியிருக்கிறார். மதம் மனிதனை மிருகமாக்கும் என்று. சிந்தித்துப்பார்த்தால், அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது.

* தினேஷ்மாயா *


முற்பிறவி பித்தலாட்டங்கள்


நான் என்னுடைய இந்த பிறவி எடுப்பதற்குக் காரணம் கர்மா (முற்பிறவியின் பாவ புண்ணியங்கள்) என்று அனைத்தையும் கர்மா மீது பழிபோடும் மதவாதிகளே.. கர்மாதான் என்னுடைய இந்த பிறவிக்குக் காரணமென்றால், உங்கள் கூற்றின்படியே, நான் எடுத்த முதல் பிறவிக்கு எந்த கர்மா காரணம் ?

அனைத்தையும் கர்மா மீது திணிப்பதை நிறுத்துங்கள். மனிதனாய் மாறுங்கள். மனிதநேயத்தோடு வாழுவோம்..

🤍


* தினேஷ்மாயா *

வாழ்க்கை

Saturday, September 18, 2021

 ஒருமுறை நாம செத்துப் போயிட்டோம்னா



நாம உயிரோட இருந்ததையே மறந்துடுவோம்...


அதனால, உயிரோட இருக்கும்போதே நல்லா நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்துக்கோங்க..

 * தினேஷ்மாயா *

பெருந்தன்மை

 ஆமாம். நான் தெரியாம தப்புப்பண்ணிட்டேன் என்று தன் தவறை ஒப்புக்கொள்பவரை நம்பலாம். 


இல்லை, அது என் தவறில்லை, பிறரால்தான் அப்படி நடந்தது என்று தெரிந்தே பொய்யுரைக்கும் நபர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள்..


* தினேஷ்மாயா *

பொம்ம பொம்மதான்

 பாடல்: பொம்ம பொம்மதா

தைய தையனக்கு

தின்னாக்கு நக்குதின் பஜங்கரே !!


அர்த்தம்: தினமும் எனக்கு தைய தையனு பஜனை செய்றீங்களே, நான் வெறும் பொம்மை பொம்மைதான்..


- இப்படிக்கு அருள்மிகு ஆனைமுகத்தான்..  🐘


* தினேஷ்மாயா *

திராவிடம் vs ஆரியம் - ஒரு பார்வை

 சங்க காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால், ஆரிய பண்பாடு திராவிட நாகரிகத்தோடு கலந்த பிற்பாடு பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். பக்தி இலக்கிய காலத்தில் பெண் புலவர்களின் பங்களிப்பு வெகு குறைவு. அதற்குப்பின் பெண் புலவர்களின் எண்ணிக்கை கைவிட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் திராவிடத்தின் எழுச்சி மற்றும் மீட்சியால் பெண்கள் இலக்கியத்திலும் பல்வேறு துறைகளிலும் சாதிக்க துவங்கினர்.


#திராவிடம் vs ஆரியம் - ஒரு பார்வை..


* தினேஷ்மாயா *

வாழ்க்கை இரகசியம்

Saturday, August 21, 2021

கடைசிவரை நல்லவனாகவே வாழ்ந்த ஒருவன் தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைக்கு சொல்லிவிட்டுப் போகும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா ?
மகனே ! எப்போதும் நல்லவனாகவே இருந்துவிடாதே !

கடைசிவரை கெட்டவனாகவே வாழ்ந்த ஒருவன் தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைக்கு சொல்லிவிட்டுப் போகும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா?
மகனே ! எப்போதும் கெட்டவனாகவே இருந்துவிடாதே !

* தினேஷ்மாயா *

தெரியாமை !

தெரிந்ததெல்லாம் சொல்லிவிட்டால்

உலகத்தில் தெரியாமையின் மகத்துவம்
சீரழியுமே !

தெரியாமையைத் தேடித்தானே வாழ்க்கை !

- சோ.தர்மன் அவர்களின் கூகை நாவலிலிருந்து..

* தினேஷ்மாயா *

ஞானத்தின் பிறப்பிடம்

ஞானத்தின் பிறப்பிடம் எது ?

எனக்கு எல்லாமே தெரியும் என்கிற மமதை நிலையில் அல்ல

எனக்கு எதுவும் தெரியாது என்கிற உண்மையை நீ ஒப்புக்கொள்ளும் தருணம் ஞானம் உன்னிடத்தில் வந்து சேர்ந்திருக்கும்..

* தினேஷ்மாயா *

என்னங்க சார் உங்க சட்டம் ?!

Friday, August 20, 2021

சட்டம்..

ஒவ்வொரு நபருக்கேற்ப

தத்தம் தேவைக்கேற்ப

அவரவர் சூழ்நிலைக்கேற்ப

மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்..

பழகிக்கொள்ளுங்கள் !!

* தினேஷ்மாயா *

தேடல் !

 விழுங்கக் காத்திருக்கும் காலடி மண்ணை மறந்துவிட்டு நாலு கால் பாய்ச்சலில் நீ தேடியலைவது எதை ?

- கூகை நாவலில் சோ.தர்மன்

* தினேஷ்மாயா *