புவியீர்ப்புவிசை

Thursday, August 15, 2019


தேவதைகள் ஊஞ்சலாட வேறெதுவும் வேண்டா..

புவியீர்ப்புவிசை போதும்..

* தினேஷ்மாயா *

ஆத்மார்த்த விலங்கு


     சுயநலமில்லா பெருவாழ்வு அனைவருக்கும் சாத்தியமில்லை. பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கையின் பண்பு. இயற்கை என்றுமே தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது. இந்த பண்பு இயற்கையிலேயே மனிதனிடத்தில் இருந்ததுதான், ஆனால் இப்போது இந்த பண்பை மனிதனிடத்தில் காண்பது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் ஒரு கை ஓசை-யிலேயே கவனம் செலுத்துகிறான். கூடிவாழும் பழக்கமும், பொதுநலன் கருதி வாழ்வதும் குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில், விலங்குகள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு

விலங்கு ஒரு ஆத்மார்த்த மனிதன் !!

* தினேஷ்மாயா *

அன்பும் பண்பும்


திகட்டாத அன்பு

திட்டாத பண்பு

வேறென்ன வேண்டுமெனக்கு !

* தினேஷ்மாயா *


காயம்


அன்பு..

பல நேரங்களில் காயங்களை தேற்றும்..

சில நேரங்களில் காயங்களை அள்ளித்தரும்..

* தினேஷ்மாயா *

முக்தி

Saturday, August 10, 2019


உன் புன்சிரிப்பே போதுமே..

முக்தி இப்பிறவியிலேயே கிட்டுமே !!

* தினேஷ்மாயா *

செல்(வ)ல மகள்


அவள் செல்லமாய் கோபித்துக்கொள்கையில்

அவளிடம் வேண்டுமென்றே மன்னிப்பு கேட்டு

மன்றாடுவதில் எப்போதும் என் மனம் இலயித்திருக்கும்...

* தினேஷ்மாய

தங்கமயில்


தோகை விரித்தாடும் ஆண்மயில்..

தோகையில்லா பெண்மயில்..

ஆனாலும் நீயொரு தங்கமயில் !!

நீயே பேரழகு !!

* தினேஷ்மாயா *

திரும்ப திரும்ப


என்னை திரும்பி பார்க்கவைத்தவளும் நீதான்

உன்னை திரும்ப திரும்ப பார்க்கவைத்தவளும்

நீ மட்டும்தான் !

* தினேஷ்மாயா *

அடைக்கும் தாழ்


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

- வள்ளுவன்

* தினேஷ்மாயா *

அறுசுவை இதழ்

Friday, August 09, 2019




அறுசுவைகளில் உயர்ந்த சுவையான

இனிப்பு சுவையை -

உன் இதழ்களில் ஒளித்து வைத்திருக்கிறாய்.

ஆனால், அதை ஏன்

எனக்கு தராமல் மறைத்து வைத்திருக்கிறாய் ?

* தினேஷ்மாயா *

நீ கொடுக்காத முத்தம்





மேகம் கீழிறங்கி வந்து

உன்னை - முத்தமிட்டு

என்னையும் உரசிவிட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

தீர காதல் காண கண்டேனே

Saturday, August 03, 2019



தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே

கனவே நனவாய் எழுந்தாயே
மனமே இறகாய் பறந்தாயே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்

அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருட்பெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்

நேற்றின் வானம் பூனை போலே
ஓடி ஒளிகின்றதே
ஈசி சாரில் சாய்ந்து கொண்டு
காலம் சிரிக்கின்றதே

வாழ்க்கை வந்து வீடும் வந்ததே
என்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே


தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

அடிக்கலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்க்கோழியின் ஒலியை
பெரும் இசையென லயித்திருப்பேன்

தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழலென படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்

தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே

காத்திருப்பில் ஜீவன் உள்ளதே
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே


படம்: மான்ஸ்டர்
வரிகள் : கார்த்திக் நேத்தா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
குரல்: சத்யபிரகாஷ்

நரை


நரை - சிலருக்கு மூப்பின் அடையாளம்

சிலருக்கோ அது மனமுதிர்ச்சி !

* தினேஷ்மாயா *

பேரன்பினால்

Sunday, July 28, 2019



அன்பை நான் அள்ளிக்கொடுக்கும் முன்னரே

தன் பேரன்பினால் என்னை கட்டிப்போட்டுவிடுகிறாள்

என் மகள் !!

* தினேஷ்மாயா *

தாயின்மடியில்


திருமணத்திற்கு முன்

ஒரு பெண்ணுக்கு கிடைக்கும்

தாயின் மடியும் கருவறையும் ஒன்றுதான்

 இரண்டுமே மீண்டும் கிடைக்காது !!

* தினேஷ்மாயா *

எண்ணங்கள் முடிவதில்லை




    சேருமிடம் தெரியாமல் பயணிக்கும் நம் எண்ணங்களில் நாம் மூழ்கிப்போகிறோம்.. மீளவிரும்பாமல் !!

* தினேஷ்மாயா *

இதய கைதி





என் இதயம்

உன் கன்னக்குழியில்

சிக்கித்தவிக்கிறத..

உன் புன்சிரிப்பால்

அதை விடுவிப்பாயா !!

* தினேஷ்மாயா *

தேவகானம்


இன்னிசைதான்..

உன்னுடன் சேர்த்து கேட்கையில் - அது

தேவகானம் ஆகிவிடுகிறது !!

* தினேஷ்மாயா *

நீயும் வரமே




    நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும், எந்தவித சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கையுடன் தோள்சாய ஒருவர் நமக்கென இருப்பது வரமே !!

* தினேஷ்மாயா *

கண்ணன் வந்தான் !!!



நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்....
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்... 
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்  கண்ணன் வந்தான்
திரைப்படம்: ராமு (1966)
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன்

* தினேஷ்மாயா *

அவள் பூச்சூடினாள்..

Saturday, June 15, 2019



பூங்கொத்தே பூச்சூடுவதா !?

* தினேஷ்மாயா *

சரணாலயம்


பூங்காக்கள் சரணாலயமாகின்றன

உன்னுடைய வருகையால் !!

* தினேஷ்மாயா *

பெரியார் வாழ்வார்!

Monday, May 27, 2019



ஏ .......
ஈரோட்டுக் கிழவா,

நீ என்ன செய்யவில்லை எங்களுக்கு?

கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவனின் பேரன்
இன்று அரசு அலுவலகத்தில் அதிகாரி!

வயலில் நாற்றுநட்டுக் கொண்டிருந்தவளின் மகள்
இன்று மருத்துவக் கல்லூரி மாணவி!

மழைக்கு ஒழுகும் குடிசையில் பிறந்தவன்
இன்று ஊரில் பெரிய சிவில் இன்ஜினியர்!

சாக்கடை அள்ளிவன் வீட்டுப் பிள்ளை
இன்று நகராட்சி ஆணையர்!

பேனா பிடித்து எழுத தெரியாத பெற்றோர்க்கு பிறந்தவன்
இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்!

கோயிலில் நுழையக் கூடாத ஜாதியில் பிறந்தவன்
இன்று இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி!

ஜமீன்தார் தோட்டத்து பண்ணையாளின் மகன்
இன்று ஜில்லா கலெக்டர்!

பேருந்து வசதியில்லாத ஊரில் பிறந்தவன்
இன்று போக்குவரத்து ஆய்வாளர்!

உயர்ஜாதியினர் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாத ஜாதியில் பிறந்தவன்
இன்று மிடுக்காக நிற்கும் போலீஸ் அதிகாரி!

ஏடெடுத்துப் படிக்கத் தெரியாதவன் வீட்டுப் பிள்ளை
இன்று ஐடி துறையில் அமெரிக்காவில்!

இவை அனைத்தும்,
கல்விக் கடவுள் சரஸ்வதியால் கிடைத்ததல்ல
மூத்திரச்சட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே
ஈரோட்டுக் கிழவன் போராடியதால் கிடைத்தது!

நன்றி என்ற உணர்ச்சி இருக்கும்வரை
பெரியார் வாழ்வார்!

#பகிர்ந்தது..

* தினேஷ்மாயா *

அரசியல் முதிர்ச்சி

Friday, May 24, 2019


   


   நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் வெற்றியை கொண்டாடுவதை பார்க்கும்போது தங்கள் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடுவதைவிட மற்ற கட்சி தோற்றுவிட்டதை கொண்டாடும் மக்களே அதிகமாக இருக்கிறார்கள். இதுவே இந்த மக்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது

* தினேஷ்மாயா *

மனதில் இருந்து...

Thursday, May 16, 2019


     என்னவளுக்கும் எனக்கும் சண்டைகள் வரும். பலநேரம் சிறிதாய், சிலநேரம் பெரிதாய். இதுபொன்ற சண்டைகள் வரும்போதெல்லாம், இருவருமே கோபத்தில், அவசரத்தில் ஏதாச்சும் வார்த்தையை பேசிவிடுவது சகஜம். ஆனால், அந்த வார்த்தையே எங்களுக்குள் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காக, நாங்கள் இருவருமே ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டோம். என்னவென்றால், இதுபோன்ற சண்டையிடும் நேரத்தில், நாங்கள் கோபமக பேசும் வார்த்தைகள் எதுவும் எங்கள் மனதில் இருந்து வந்ததில்லை, அந்த வார்த்தைகளை மற்றொருவரை வேண்டுமென்று புண்படுத்த பேசிய வார்த்தையில்லை என்கிற புரிதலை கொண்டிருக்கிறோம். 

   அதனால், கோபத்தில் பேசும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த சண்டையை பெரிதாக்க மாட்டோம். இதுபோல் நீங்களும் பின்பற்றி பாருங்கள். கணவன் மனைவி உறவு அதன் புனிதத்தன்மை கெடாமல் என்றும் இனிமையாக இருக்கும்...


அன்புடன்

* தினேஷ்பூர்ணிஷா *

இணையே என் உயிர் துணையே

Wednesday, May 08, 2019



இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி ?
அழகே என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே.. நீ இருந்தால்..
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
தேனீரில் தேன் கூடுமே

துணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா ?
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா ?
இணையே....

மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே
உன் இமையினலே
நான் கரைவது ஏனடி ?

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா ?

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இமையினிலே
நான் கரைவது ஏனடி
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

படம் : தடம்
வரிகள் : மதன் கார்க்கி
இசை : அருண் ராஜ்
குரல் : சித் ஸ்ரீராம் , பத்மலதா

இப்பாடல் வரிகள் என்னவளுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்..

* தினேஷ்மாயா *

மண்ணுக்குள்

Monday, May 06, 2019




மண்ணுக்குள் செல்வதை எண்ணி வருந்தாதே...

மண்ணுக்குள் செல்வதுதான் விதையாகிறது..

மண்ணுக்குள் செல்வதுதான் வைரமாகிறது..

* தினேஷ்மாயா *

வேற்றுகிரகவாசி

Friday, April 05, 2019


 என் சின்ன வயதில், எனக்கு விண்வெளி ஆராய்ச்சியாளன் ஆகவேண்டும் என்கிற கனவு இருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டும், நிலவிற்கு செல்ல வேண்டும், விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்கிற கனவும் ஆசையும் அதிகம் இருந்தது. 

ஆனால், இன்று நம் அறிவியல் இந்த அனைத்தையும் சாத்தியமாக்கிவிட்டது. இருந்தாலும் அந்த ஆசையும் கனவும் வெகுவாய் குறைந்துவிட்டது. இப்போது என்னை விண்வெளிக்கு/நிலவிற்கு/செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வதாக சொன்னாலும் நான் வேண்டாம் என்றே சொல்வேன். எனக்கு இந்த பூமித்தாயை பிடித்திருக்கிறது. இதன் அருமை எனக்கு புரியும். இதுபோன்றதொரு இடம் வேறெங்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

இருக்கும் இடத்தைவிட்டு எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே என்கிற பாடல்தான் நினைவில் ஒலிக்கிறது...

* தினேஷ்மாயா *

இதுதான் மனிதன்


2024-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களையும், 2033-ம் ஆண்டிற்குள் மனிதர்களையும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 

இருப்பது ஒரு பூமி. இதை பாதுகாத்து இங்கே மனித இனம் செம்மையாய் வாழ எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வேறு கிரகத்தில் குடிபெயர முயற்சிகள் மேற்கொள்பவன்தான் மனிதன் !!

இயற்கையின் படைப்பில் தன் இனத்தை தாமே அழிக்கும் ஒரே இனம் - மனித இனம் மட்டுமே. 


* தினேஷ்மாயா *

அவனருளாலே அவன் தாள் வணங்கி

Friday, March 22, 2019







 அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், திருக்கல்யாண உற்சவம் இன்று காணும் பாக்கியம் பெற்றேன். இங்கே வந்து முப்பது ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த நொடியில் அவனருளாலே அவன் தாள் வணங்கும் பேறு பெற்றேன் இன்று.

ஓம் சிவ சிவ ஓம்

* தினேஷ்மாயா *

காதலி

Wednesday, March 13, 2019


உலகில் இருக்கும் பலரால் காதலிக்கப்பட்ட காதலி இவள்

இந்த நிலாப்பெண் !!

* தினேஷ்மாயா *

10948




இன்றுடன் நான் இங்கே அவதரித்து 10948 நாட்கள் ஆகிறது. இன்னும் சில நாட்களில் 30 வயதை எட்டி பிடிக்கப்போகிறேன். முப்பது ஆண்டுகள் !! நிச்சயம் நான் இதை திரும்பி பார்த்தே ஆகவேண்டும்.

இந்த முப்பது ஆண்டுகளில் வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்ததை வைத்துதான் இனி வாழப்போகும் வருடங்களை கடக்க உறுதுணையாக இருக்கும் என்பதை நன்கு அறிவேன். இதுநாள்வரையில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே பதியலாம். ஆனால், அதை இங்கே வலையில் பதிவதைவிட இன்னும் சில ஆண்டுகளில், ஒரு பெரிய சாதனையை செய்துவிட்டு அதன்பின் ஒரு புத்தகமாகவே பிரசுரிக்கலாம் என்றிருக்கிறேன்.

அனுபவமே ஒருவனுக்கு சிறந்த ஆசான் என்பது எத்துனை உண்மை என்பதை இத்தனை ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவங்களை நினைத்துப்பார்க்கையில் உணர்கிறேன்.

அனுபவங்கள் மட்டுமல்ல, அவமானங்களும், தோல்விகளும், சில துரோகங்களும், பல வலிகளும், பற்பல ஏமாற்றங்களும், பல ஆண்டு தனிமையும், எண்ணிலடங்கா இரவு நேர அழுகைகளும், பசியும்,  பணமில்லா நாட்களும், தூக்கம் தொலைத்த இரவுகளும், சொல்லாத ஏக்கங்களும், ஆறுதல் சொல்ல யாருமில்லாத அந்த கொடுமையான வாழ்க்கையும் எனக்கு கற்றுக்கொடுத்தது நிறைய ... நிறைய நிறைய...

பல தவறுகளை செய்திருக்கிறேன். சில தப்புகளையும் செய்திருக்கிறேன். பல தெரியாமல் செய்துவிட்டு பின்னர் தவறு என்று உணர்ந்தது. சில, செய்யும்போதே தப்பு என்று தெரிந்தே செய்தது. இந்த தவறுகளும் தப்புகளும் சொல்லி கொடுத்த பாடங்கள் ஏராளம்.


யார் விதைத்ததோ தெரியவில்லை, ஆழ்மனதில் சிறுவயதில் இருந்தே IAS ஆகவேண்டும் என்பது கனவு / இலட்சியமாக ஆகிவிட்டது. அதனால், படிக்கும் காலத்தில் இருந்தே அதைநோக்கியே பயணப்பட ஆரம்பித்துவிட்டேன். பள்ளிப்பருவத்தில், விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்றும் கனவு இருந்தது. அதற்காக என் முதுநிலை பட்டபடிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். ஆனால், மேற்படிப்பு படித்தால் மட்டுமே நாசா, இஸ்ரோ போன்ற இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், மேற்படிப்பை தொடராமல், IAS  தேர்விற்கு படிக்க ஆரம்பித்துவிட்டேன். கிடைத்த ஒரு அரசு வேலையையும், ஒரு தனியார் நிறுவன வேலையையும் வேண்டாம் என்று உதறிவிட்டு என் இலட்சியத்தை நோக்கி நடக்க துவங்கினேன். அன்று நான் எடுத்த அந்த முடிவுதான் இன்று என் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றியிருக்கிறது என்றும் சொல்வேன். நாம் எடுக்கும் முடிவுகள்தாம் நம் வாழ்க்கை எப்படி செல்ல வேண்டும் என்கிற திசையை தீர்மானிக்கிறது என்று புரிந்துக்கொண்டேன்.

வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருமானத்தை கொடுக்கும் ஒரு நல்ல அரசு வேலையில் என்னை தற்காலிகமாக இருத்திக்கொண்டு என் இலட்சியத்தை நோக்கிய என் பயணத்தை முன்னெடுத்து சென்றுக்கொண்டிருக்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதுபோல், கல்வி மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே சொத்து. அதுவே என்னை இந்நிலைக்கு உயர்தியுள்ளது. 

வாழ்க்கை எனக்கு என்ன கற்றுகொடுத்தது என்றால், வாழ்க்கை பயணம் இனிமையானது. மிகவும் இனிமையானது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஆம் !! எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க பல விஷயங்களையும் வாழ்க்கை கொடுக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் கஷ்டப்பட பல விஷயங்களையும் சேர்த்தே கொடுக்கிறது வாழ்க்கை. 

ஆக !! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை ஒரு குறுகிய காலத்தில் உணரும்படி என்னை என் வாழ்க்கை வழிநடத்தியிருக்கிறது என்பதில் பெருமை எனக்கு.


இசையும், இயற்கையும், இறைவனும், அன்பும், என் சிந்தனையும் கற்பனையும் என் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கங்கள். 


இன்னும் இங்கே சொல்ல நிறைய நிறைய் இருக்கு. ஆனால், அனைத்தையும் கோர்வையாக சொல்லவிடாமல் சோர்வு என்னை தாக்குகிற காரண்த்தால், தற்காலிகமாக விடைபெறுகிறேன். விரைவில் இந்த பதிவை தொடர்கிறேன்.

* தினேஷ்மாயா *

அனுபவமே கடவுள் - கண்ணதாசன்

Wednesday, February 06, 2019



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

 - கவியரசர் கண்ணதாசன்

* தினேஷ்மாயா *

ஏக்கத்துக் கொருவர் போதும்.



அன்புக்கோ இருவர் வேண்டும்

அழுகைக்கோ ஒருவர் போதும்

இன்பத்துக் கிருவர் வேண்டும்

ஏக்கத்துக் கொருவர் போதும்.


- கவியரசர் கண்ணதாசன்


* தினேஷ்மாயா *

அவளுக்கும் தமிழ் என்று பேர்




அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும்
குழல் அந்த முகிலுக்கு நேர்

அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல்
கண்டு கொண்டாடும் ஊர்

அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள் நல்ல
பெண்மைக்கு வேர் பெண்மைக்கு வேர்

அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள்
கவிதைக்கு மேல் கவிதைக்கு மேல்

அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை
உழுகின்ற ஏர் உழுகின்ற ஏர்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும்
வயலுக்கு நீர் வயலுக்கு நீர்

அவள் எந்தன் நினைவுக்கு தேன்
இந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்கு தேன்
இந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

படம்: பஞ்சவர்ண கிளி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: டி.எம்.சௌந்தர்ராஜன்

 * தினேஷ்மாயா *

தமிழுக்கும் அமுதென்று பேர்





தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்



எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை....

* தினேஷ்மாயா *

தாயும் யாரோ ? தந்தை யாரோ ?




தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம்
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன்
கொண்ட பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

மனிதன் யாரப்பா ?
சிந்திக்கும் மிருகம்
இரை தந்தால் பழகும்
பசி வந்தால்
விலகும்

பாசம் பந்தங்கள்
கற்பித்த உலகம்
இதயங்கள் கருகும்
என்றாலும் உருகும்..

சொந்தம் என்கின்ற
சுமையே கூடாது
பட்டாம் பூச்சிக்கு
பாரம் ஆகாது

அவமானம் தாங்கும்
வாழ்க்கை வந்தால்
அன்பு தொல்லையே

கடலில் பிறந்தாலும்
முகில் எங்கோ அலையும்
மழை எங்கோ பொழியும்
அதுபோல்தான் உறவும்

தாய்க்குப் பிறந்தாலும்
தாய் வேறு உலகம்
மகன் வேறு உலகம்
இதில் என்ன பாசம்?

வீசும் காற்றுக்கு
தேசம் கிடையாது
வீதிக்கு வந்த மனம்
பாசம் அறியாது

நான் என்னை மட்டும்
நம்பி நம்பிப் பயணம் போகின்றேன்...

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம் 
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன்
கொண்ட பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

படம்: பெரியார்
இசை: வித்யாசாகர்
வரிகள்: வைரமுத்து
குரல்: கே.ஜே.ஏசுதாஸ்

பாடலை தனியாக கேட்கும்போது ஒரு உணர்வை தருகிறது. படத்தில் பார்க்கும்போது துயரத்தையும் கண்ணீரையும் தருகிறது. வரிகள், இசை, குரல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த பாடல் ஏதோ செய்கிறது..

 * தினேஷ்மாயா *

வளர்ந்த குழந்தை


வளர்ந்த குழந்தை நீ !

* தினேஷ்மாயா *

பனி தேவதை


பனிப்பொழிவில் இருந்து

உயிர்த்தெழுந்து வந்த

தேவதை !!

* தினேஷ்மாயா *

அடிமை நிலா !


ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறாய்

உன் பார்வையினாலே அந்த நிலாவை

உனக்கு அடிமையாக்கிவிடலாமே நீ ?

* தினேஷ்மாயா *