சிவபுராணம்

Thursday, January 25, 2018


நம் இரவும் உறவும்

சிவபுராணத்தில் இருந்தே 

துவங்கியது !!

* தினேஷ்பூர்ணிஷா *

பதில் !


நம் அனைத்து கேள்விகளுக்கும், தயக்கங்களுக்கும்

நம் காதல் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது..

* தினேஷ்மாயா *

பொறுத்திருப்போம்



காமம் கேள்வி கேட்கும்

காலம் பதில் சொல்லும்

பொறுத்திருப்போம் கண்ணே !!

* தினேஷ்மாயா *

என் இறைவி




என் வாழ்க்கைக்கு துணையாக

என் உயிருக்கு துணையாக

என் உணர்வுகளுக்கு துணையாக

என் மனதிற்கு துணையாக

என் உணர்ச்சிகளுக்கு துணையாக

என் இன்பதுன்பங்களுக்கு துணையாக

என் இறைவன் எனக்கு பரிசளித்த

என் இறைவி

"பூர்ணிஷா" 

இனி என் வாழ்க்கைப்பயணம்

"உன்னோடு" மட்டும்தான்..

#தினேஷ்பூர்ணிஷா

இருட்டறை

Friday, January 12, 2018


சட்டம் ஒரு இருட்டறை

சட்டமன்றம் ஒரு இருட்டறை

நீதிமன்றமும் ஒரு இருட்டறை  !

* தினேஷ்மாயா *

மதம்


மதம் மனிதனை புனிதமாக்க உருவானது. ஆனால் இன்றோ, மதம் என்பது மனிதனுள் ஒற்றுமையை வளர்க்காமல் மனிதர்களிடையே பிளவை ஏற்படுத்தும் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது..

* தினேஷ்மாயா *

முடிந்த கதை


முடிந்த கதையை எண்ணி எந்த பயனும் இல்லை. வாழ்வின் அடுத்த அடியை எடுத்துவைத்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்..

* தினேஷ்மாயா *

எதிரி



எதிரில் நிற்பதாலேயே - அவர்
எதிரி ஆகிவிட முடியாது..

எதிரி என்பவன்,
எதிரில் மட்டுமே இருக்க வேண்டும்
என்றில்லை!!

நம் அருகிலும் இருக்கலாம் !

#தினேஷ்மாயா

மார்கழி Atrocities

Sunday, January 07, 2018



     காலைல 4 மணிக்கு குளிரில் தூக்கம் போய், யாராச்சும் எழுந்து மின்விசிறியை நிறுத்த மாட்டார்களா என சோம்பலோடு பாதி உறக்கத்தில் தவிக்கையில், மின்சாரம் தானாக தடைபடும் பாருங்க.. அட அட அடா..

அதாங்க சொர்க்கம் !!

#மார்கழி_Atrocities

* தினேஷ்மாயா *

மருந்து


என் வலிகளுக்கு

என் காயங்களுக்கு

என் நினைவுகளுக்கு

என் தவறுகளுக்கு

என் இதயத்திற்கு

என் உதிரத்திற்கு

என் உயிருக்கு

எனக்கு

இவையனைத்திற்கும்

ஒரே மருந்து -

நீ !!

* தினேஷ்மாயா *

சட்டம் ஒரு இருட்டறை



   தவறு செய்வது மனித இயல்பு. தவறின் நோக்கத்தையும் அதன் விளைவையும் பொறுத்தே தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவே சிறந்த சட்டம். அனைத்து தவறுகளுக்கும் ஒரே தண்டனை என்பது, எவ்விதத்திலும் சரியல்ல

#தினேஷ்மாயா

Richie

Saturday, January 06, 2018



நிவின் பாலியின் முதல் தமிழ்ப்படம்.

நிவினின் நடிப்பு பக்கா..

படத்தின் அனைவரது நடிப்பும் சூப்பர்..

படமும் தூள்..

* தினேஷ்மாயா *

அருவி..




அருவி !!
அருமையான திரைப்படம்..

ஓடிச்சென்று நாம் அணிந்திருக்கும் பொய்யான முகமூடிகளை அவிழ்த்துவிட்டு சின்னஞ்சிறிய குழந்தையாய் வாழ்வெனும் அருவியில் நனைவோம் !

* தினேஷ்மாயா *

இவன் சிவன் !!

Tuesday, January 02, 2018




 என்னவள் என்னிடம் கேட்டாள். என் வலைப்பக்கத்தில் அவளும் தன் கருத்துக்களையும் பதியலாமா என்று. நான் சொன்னேன், சிவன் தன் பாதியை பார்வதிக்கு கொடுத்ததுபோல, நானும் என் பாதியை உனக்கு கொடுத்துவிட்டேன். அப்படியிருக்கையில், என் வலைப்பக்கத்தில் பதியும் பொறுப்பில் பாதியை உனக்கும் தருகிறேன் என்றேன் !!

* தினேஷ்பூர்ணிஷா *

உன் இடை !!




மலைப்பாதையில் வளைவுகள் அதிகம்

உன் இடையிலும் தான் !!

* தினேஷ்மாயா *

பழரசம்



நவரசத்தை உடலிலும்

பழரசத்தை இதழிலும்

மறைத்து வைத்திருக்கிறாள்

என்னவள் !!

* தினேஷ்மாயா *

தேன் கன்னம்



தேன் கிண்ணம் தெரியும்..

தேன் கன்னம் இப்போதுதான்

கேள்விப்படுகிறேன் !

தேன் சுவை என்பது இதுதானோ ??

* தினேஷ்மாயா *

2018


   என் மாயா தேடல் 2017-ல் முடிவுக்கு வந்தது. என் மாயா என் துணையாக வரும் ஆண்டு 2018. இனிவரும் அனைத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்கள் இருவரிடமிருந்தும் வரும். 

என் அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், என் மாயாவிற்கும், இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

* தினேஷ்பூர்ணிஷா *

நாம் பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி !

Tuesday, December 19, 2017


கண்கள் நான்கில்

காணப்படும்

காட்சி - ஒன்றே - அதுதான் நம்

காதல் !!

* தினேஷ்மாயா *

மீண்டும் ஒருமுறை

Friday, December 15, 2017




பல மாதங்களுக்குப் பிறகு

இன்று - மீண்டுமொருமுறை

தூக்கம் தொலைத்திருக்கிறேன் !

#தினேஷ்மாயா

கவிஞானாகிவிட்டேனோ


காரணமுமின்றி

கருவுமின்றி

கவியெழுதுவதால் - நானும்

கவிஞானாகிவிட்டேனோ ?!

#தினேஷ்மாயா




செவி சேரா மௌனங்கள்



   ஒரு நடுத்தர வர்க்கத்தின் ஆண்மகனின் ஆசைகளும் கனவுகளும் உணர்வுகளும், கடைசிவரை சொல்லப்படுவதும் இல்லை, கேட்கப்படுவதும் இல்லை..

#தினேஷ்மாயா

அர்த்தம்



அவள் பேசிய வார்த்தைகளைவிட,

அவன் பேசாத வார்த்தைகளுக்கு

அர்த்தம் அதிகம் !!

#தினேஷ்மாயா

நான்கு கண்களில்



அவளின் அழுகை

நான்கு கண்களிலும்

நீரை வார்க்கிறது !

என் கண்களையும் சேர்த்து..

#தினேஷ்மாயா

UNIVERSE

Tuesday, December 12, 2017



Home..

Street..

Home town..

Native District..

Home State..

Mother Nation..

World...

I thought all these days I belong here..

Nope..

I belong to this entire UNIVERSE !!

Definitely I can say that, if I depart from this world,

I will.land on a very very beautiful place of this UNIVERSE !!

* தினேஷ்மாயா *

Is it so ?



Suicide is not the only option !!

But - if you don't have any other option

This will.be the final option !!

- Anonymous

*  தினேஷ்மாயா *

Sometimes.....


* தினேஷ்மாயா *

காவிய காதல்

Monday, December 11, 2017





நம் முத்தம் ஒரு

ஹைக்கு -

சிறிதாக இருந்தாலும்

சிலிர்க்க வைக்கும் !!

நம் ஊடல், ஒரு

காவியம் -

கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்

படிக்க படிக்க குதூகலமூட்டும் !!

நம் கூடல், ஒரு

இதிகாசம் -

படிக்க படிக்க சிலிர்க்கும்

படித்து முடித்தாலும்

காலம் காலமாக மனதில் நிற்கும் !!

* தினேஷ்பூர்ணிஷா *

கவிதைகள் சொல்லவா !!


நாணத்தால் நான் நிலம் நோக்க

ஆச்சரியத்தில் நீ வான் நோக்க

நம் இதழ்கள்

கவி பேசிக்கொள்கின்றன !!

* தினேஷ்பூர்ணிஷா *

புதுப்புது அர்த்தங்கள்




என் விரல்கள் எத்தனையோ

கவிதைகள் கிறுக்கி இருக்கிறது..

ஆனால் -

என் விரல்கள் உன் தேகத்தில்

கவியெழுதும்போதுதான்

என் கவிதைகளுக்கு

புதுப்புது அர்த்தங்கள் பிறக்கிறதடி..

* தினேஷ்பூர்ணிஷா *

பத்திரமாக வைத்துக்கொள்



உன்னிடம் தந்துவிட்டு வந்திருக்கிறேன்..

அடுத்த வாரம் வந்து திரும்ப -

வாங்கிக்கொள்கிறேன்..

அதுவரை பத்திரமாக வைத்திரு -

என்னுயிரை !!

* தினேஷ்பூர்ணிஷா *

ஏழாம் சுவை



இதுவரை நான் அறிந்தது

அறுசுவை மட்டுமே..

இன்று உணர்ந்தேன்

ஏழாம் சுவையை !!

உன் இதழ்களின் தேன்சுவையை !!

* தினேஷ்பூர்ணிஷா *

மௌன ஞானி

Thursday, December 07, 2017




என் சிந்தையில் உதித்த ஞான சிறுகதை இது..

" ஒருவன் என்னிடம் கேட்கிறான்..

மூன்று பேர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர்..

முதலாமவர் அந்த விஷயத்தை வாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இரண்டாமவர் அந்த விஷயத்தை விவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

மூன்றாமவர் அந்த விஷயத்தை விதண்டாவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த மூவரில், யார் செய்வது சரி என்று என்னிடம் வந்து கேட்கிறான்.

நான் மௌனமாக இருந்தேன். மீண்டும் என்னிடம் இதே கேள்வியை கேட்கிறான். அப்போதும் நான் மௌனமாக இருந்தேன். அவன் இந்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டான். ஆனாலும் நான் ஒவ்வொருமுறையும் மௌனமாகவே இருந்தேன். அவன் பொறுமை இழந்து சென்றுவிட்டான்.

நான் அவனுக்கு சொன்னது அவனுக்கு புரியவில்லை. எந்த ஒரு விஷயமானாலும், அதில் வாதம் செய்வதோ விவாதம் செய்வதோ அல்லது விதண்டாவாதம் செய்வதோ சரியல்ல. அனைத்து நிலையிலும் மௌனம் காப்பதே சிறந்தது என்பதை நான் அவனுக்கு குறிப்பால் உணர்த்தினேன். ஞானம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்வார்கள். ஞானமற்றவர்களுக்கு ஞானம் வரும்போது மௌனத்தின் சக்தி புரியும் !"

* தினேஷ்மாயா *

கேள்வி பதில்



கேட்கப்படும் அனைத்தும்
கேள்விகள் ஆகிவிடாது..

சொல்லப்படும் அனைத்தும்
பதில்கள் ஆகிவிடாது..

* தினேஷ்மாயா *

காதலும் களவும்

Friday, December 01, 2017



ஆன்றார் உரைப்பர்

மந்திரம் கால் மதி முக்கால்..

நானுரைப்பேன்

களவு கால் காதல் முக்கால் !!

* தினேஷ்மாயா *

சொர்க்க வாசல்



நான் அவள்மேல் கொண்ட

ஆசையின் பாதையில்

பயணப்பட்டேன்..

சொர்க்கத்தின் வாசல் என்னை

அன்புடன் அழைத்தது !!

* தினேஷ்மாயா *

கள்ளி நீ




கனவுகளில்

களவாடிவிட்டு சென்ற

கள்ளி நீ !!

* தினேஷ்மாயா *

நீதானடி



இசைக்கு அடுத்து

இவ்வுலகில் - என்னுயிரை

இதுபோல் துளைத்தது

நீதானடி !!

* தினேஷ்மாயா *

எப்போது ?



உன்னோடு நான்

கைகோர்த்து நடப்பது

எப்போது ?


உன் மடியில் நான்

தலைசாய்த்து கதைபேசுவது

எப்போது ?


உன் கைகளால் நான்

உணவை சுவைப்பது

எப்போது ?


உன் கைகளால் என்

தலை முடி கோதப்படுவது

எப்போது ?


உன் அழகில் நான்

மயங்கப்போவது

எப்போது ?


உன் பார்வையால் நான்

உன்னில் தொலைவது

எப்போது ?


உன் இதழ்களில் நான்

புல்லாங்குழல் வாசிப்பத

எப்போது ?


உன் பெண்மைக்கு நான்

விடை சொல்வது

எப்போது !!!!


* தினேஷ்மாயா * 

வானவில்



என்னவள் -

தன் கைகளில்

கொஞ்சம் கோலப்பொடியை எடுத்து

வானத்தை நோக்கி தூவினாள்...

வானவில் பிறந்தது !!

* தினேஷ்மாயா *