யார் செய்யும் தவறு ?

Thursday, May 28, 2015


மனிதர்கள் இங்கே செய்யும் தவறுக்கு

விலங்குகள் துருவங்களிலும் காடுகளிலும்

தண்டனையை அனுபவிக்கிறது..

இதுவா இயற்கையின் முரன் ?

* தினேஷ்மாயா *

நீ வேண்டும்


மாலைப்பொழுதின் மயக்கத்திலே -

நீ என்னருகே வேண்டும் தோழி..

* தினேஷ்மாயா *

விடையை தேடுவோம்..


காதல் -

காமத்தின் ஒரு பகுதியா ?

காமம் -

காதலின் ஒரு பகுதியா ?

தெரியவில்லை..

வா -

அணைத்தபடியே விடையை தேடுவோம் !!

* தினேஷ்மாயா *

எதிர்ப்பு



மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

எந்த அரசாங்கமும் -

மக்களின் எதிர்ப்பைத் தவிர

வேறெதையும் அதிகம் சம்பாதித்ததில்லை..

* தினேஷ்மாயா *

தேடல்


வெளியில் தேடி சலித்துவிட்டேன்..

என்னிடம் தேட மறந்துவிட்டேன்..

உனக்குள் தேடி கலந்துவிட்டேன்..

* தினேஷ்மாயா *

நான் கவிழ்ந்துவிட்டேன்


கன்னத்தில் கைவைத்தால் -

கப்பல் கவிழ்ந்துவிட்டதா என்று கேட்பார்கள்..

அது எனக்கு தெரியாது..

நான் கவிழ்ந்துவிட்டேன்

உன்னிடம்..

* தினேஷ்மாயா *

எங்கே முடியும் ?


காதல், திருமணத்தில் முடிய வேண்டும் என்கிறார்கள்..

முடிந்தால் அது எப்படி காதலாகும் ?

காதலுக்குதான் முடிவென்பதே இல்லையே !

* தினேஷ்மாயா *

காதல் கொண்டேன்



அலை அடித்து செல்லும் என தெரிந்தும்

தன் பெயரை அனைவரும் கடற்கரையில் எழுதி பார்ப்பார்கள்..

அதுபோலத்தான் -

வலிமட்டுமே மிஞ்சும் என தெரிந்தும்

உன்னை காதலிக்க துவங்கினேன் நான்..

* தினேஷ்மாயா *

புல்லாங்குழல்



உனக்கு காது குத்தியது சரி..

ஆனால் -

நீ கம்மல் அணிந்தது தவறு !

காற்று வீசி -

உன் காதுகளும் ஒரு புல்லாங்குழல் ஆவதை

நீ தடுத்துவிட்டாயடி !

* தினேஷ்மாயா *


மின்னல் வெட்டும்


பெண் -

பூமியை பார்த்துதான் நடக்க வேண்டும் என்பார்கள்.

ஏன் தெரியுமா ?

நீ மேலே பார்க்கும்பொழுதெல்லாம்

மின்னல் வெட்டுமே !

அதனால் !!

* தினேஷ்மாயா *

தாலி கட்டாமல்


தாலி கட்டாமல் நம் திருமணம் நடந்தால் என்ன ?

நாம் இணைந்ததற்கு அடையாளம் எதற்கு ?

அன்பை பரிமாற்றம் செய்துக்கொள்ள முடிச்சுகள் தேவையா ?

இங்கு போடும் முடிச்சுகள் தான்

நம் வாழ்க்கையின் முதல் சிக்கல்கள் என நினைக்கிறேன் !!!

* தினேஷ்மாயா *

திருடன்


உன்னிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்..

இந்த திருடும் பழக்கத்தை..

* தினேஷ்மாயா *

மஸ்காரா


இவள் கண்களை மூடும்பொழுது

எனை கொல்லும் வேலையை செய்ய

தன் இமைகளுக்கு கற்றுக்கொடுக்கிறாள்..

* தினேஷ்மாயா *

இதயத்துடிப்பு


களவியலின் பொழுது,

நம் இருவரின் இதயம் வேகமாய் துடிப்பதன் காரணம்

அறிவாயா பெண்ணே ?

உயிர் பிரியும்போதும்,

உயிர் உருவாகும்போதும்,

உயிர்கள் கலக்கும்போதும்

இதயம் வேகமாய் துடிக்கும்..

நான் கண்டறிந்த அறிவியல் !!

* தினேஷ்மாயா *

தூக்கம் தொலைப்பதென்று


இன்றுமுதல் -

என் தூக்கத்தை தொலைப்பதென்று

முடிவெடுத்துவிட்டேன்..

கனவில் நீ வராத காரணத்தால்..

* தினேஷ்மாயா &

பொன்சாய்..


பொன்சாய் -

வீட்டிலேயே மரம் வளர்ப்பது..

பெண்செய் -

வீட்டிலேயே அழகுச்செடி

உன்னை வளர்ப்பது..

* தினேஷ்மாயா *

கல்வி


பள்ளியிலும் புத்தகத்திலும்

படிப்பதல்ல கல்வி..

உலகம் தானாகவே

ஒவ்வொன்றாய் சொல்லிக்கொடுக்கும்..

அதுதான் உண்மையான கல்வி.

* தினேஷ்மாயா *

என் செல்லமே !


என்ன சிந்தனையோ ?

இந்த பிஞ்சு மனதுக்குள் !!

ஏக்கமா ?

தூக்கமா ?

என் செல்லமே !

* தினேஷ்மாயா *

அலாதி இன்பம்


ரகசியம் பேசாவிட்டாலும்

ரகசியமாய் உன்னிடம் பேசுவது

அலாதி இன்பமடா எனக்கு..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி

Wednesday, May 27, 2015


குழந்தைக்கு தெரிந்த ஒரே விஷயம்

மகிழ்ச்சி..

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும்

எல்லாவற்றிலும் மகிழ்ச்சியை காணவும்

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்..

* தினேஷ்மாயா *

நீதானே !


நீதானே !

அந்த ரயில் பயணத்தில்

என் மனதை திருடியவள்

நீதானே !

ஒற்றை பார்வையில்

உயிரை வருடியவள்

நீதானே !

என்னுள் ஒளிந்த காதலை

எனக்கு அறிமுகள் செய்தவள்

நீதானே !

என்னுள் இருந்த கவிஞனை

தட்டி எழுப்பியவள்

நீதானே !

நட்பா ? காதலா ?

நீயும் குழம்பி என்னையும் குழப்பியவள்

நீதானே !

உனக்கும் எனக்கும் காதலென்று

ஊரெல்லாம் பேசவைத்தவள்

நீதானே !

தெரியாமல் பேசிய ஓர் வார்த்தைக்கு

ஆறு மாதங்கள் பேசாமல் போனவள்

நீதானே !

உன்னை தேடும் ஆசையில்

உன் ஊர் தேடி வரவைத்தவள்

நீதானே !

காரணமே இல்லாமல்

என்னை பிரிந்து சென்றவள்

நீதானே !

* தினேஷ்மாயா *

உனக்கான காதல்


காதல் என்கிற பெயரில்

பலர் வரலாம் போகலாம்..

நீ காதலை தேடி அலையாதே..

உண்மையான காதல் -

உனக்கான காதல் -

ஒன்றே ஒன்றுதான்..

அது நிச்சயம் உன்னைத்தேடி வரும்.

அதுவரை பொறுத்திரு..

காதலை உன் மனதில் விதை..

அவள் வந்ததும்,

அவளோடு சேர்ந்து அறுவடை செய்

உங்கள் காதலை..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சியான தருணம்


வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில்

இதுவும் ஒன்று..

* தினேஷ்மாயா *

உன்னருகில் நானிருப்பேன்


நீ -

அழைத்திடும் தூரத்தில்

அணைத்திடும் தூரத்தில்

எப்போதும் நானிருப்பேன் !

* தினேஷ்மாயா *

உன்னுள் மூழ்கி


உன்னுள் மூழ்கி வித்தெடுத்த எனக்கு -

கடலில் மூழ்கி முத்தெடுப்பது பெரிதல்லவே !

* தினேஷ்மாயா *

நான் பைத்தியமா ?


பைத்தியம் காதலிக்காது என்றார்கள்..

உன்னை காதலித்ததால் 

உன் மீது பைத்தியம் ஆனேன்..

இன்னமும் உன்னை காதலிக்கிறேன்..

நீயே சொல்..

நான் பைத்தியமா ? இல்லையா ?

* தினேஷ்மாயா *

முயற்சி..




   இறைவன் மீது அளவு கடந்த நம்பிக்கை எனக்கு உண்டு. எல்லாம் அவன் நல்லதாகவே நடத்துவான் என்று எப்போதும் நம்புபவன் நான். ஒரு சிறு பிரச்சனை இரண்டு நாட்களாக என்னை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது..

இறைவனிடம் மனதில் பேசிக்கொண்டிருந்தேன். எப்படியும் அந்த பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று.. 

இன்று அதிகாலை எழுந்ததும், இறைவனை நினைத்து இன்றைய தினம் நன்றாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு, முதலில் அந்த பிரச்சனையை சரிசெய்ய முயன்றேன். அப்போதுதான், அந்த பிரச்சனைக்கான காரணத்தையே கண்டறிந்தேன். காரணம் தெரிந்துவிட்டதால், அதற்கான தீர்வும் உடனே கிடைத்துவிட்டது. வெறும் பத்து நிமிடத்தில் அந்த பிரச்சனை முடிந்துவிட்டது. இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த பிரச்சனையை தீர்த்துவைத்ததற்கு மட்டுமல்லாமல், என்னையே அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்ய வைத்தமைக்காகவும்.

ஆம்.. நம் பிரச்சனையை வெளியில் இருந்து யாரோ ஒருவர் மூலம்தான் இறைவன் தீர்த்து வைப்பான் என்றில்லை. நமக்கான தீர்வை இறையருளோடு நாமோ தீர்க்க முயற்சித்தால், நிச்சயம் அது தீர்ந்துவிடும் என்பதை இன்று புரிந்துக்கொண்டேன்..

* தினேஷ்மாயா *

நீர் இன்றி அமையாது உலகு

Tuesday, May 26, 2015




      நீர் இன்றி அமையாது உலகு - வள்ளுவர் கடவுளை வாழ்த்தியதும் கையில் எடுத்த அதிகாரம் வான்சிறப்பு. அப்படியானால், இறைவனுக்கு அடுத்தது மழை என்பது புரிந்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகின் மூன்று பக்கமும் நீர் இருப்பதால், நீரின் அவசியம் எவர்க்கும் புரிவதில்லை. இனி வரவிருக்கும் வருடங்களில் தண்ணீருக்காக உலக யுத்தம் நடக்கும் அபாயம் உள்ளது. போதுமான அளவில் தண்ணீரை பயன்படுத்த இங்கே எவர்க்கும் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதில்லை. உலகில் 75% நீர் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். அப்படி நீர் இருந்தும், தண்ணீர் இன்றி பலர் இங்கே இறந்திருக்கின்றனர். சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங்கள். அப்படியொரு கருப்பு சரித்திரத்தை நமது சந்ததியினருக்கு நாம் விட்டு செல்ல வேண்டாம். அளவோடு பயன்படுத்தி, தண்ணீரை சேமிப்போம். 
நிலைமை கைமீறி சென்றபிறகு தண்ணீர் சேமிப்பதைவிட, இன்றே துவங்குவோம், தண்ணீர் சேமிப்பை..

* தினேஷ்மாயா *

இரண்டு குழந்தை



         சமீபகாலமாக எனக்கு ஒரு சிந்தனை. திருமணம் செய்த பிறகு, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது பெரும்பாலான நம் இந்தியர்களின் எண்ணம். இதில் தவறேதும் இல்லை என்றாலும், பெருகிவரும் மக்கள்தொகையை மனதில் கொண்டு, ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளலாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால், இரண்டு குழந்தைகள் தானே உங்களுக்கு வேண்டும். ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் இரண்டு குழந்தைகள் என்றாச்சு, ஒரு அநாதை குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைச்சாச்சு. இதற்கு நிச்சயம் பெரிய மனசு வேண்டும். இதுநாள் வரையில், திருமணத்திற்குப்பிறகு இரண்டு குழந்தைகள் என்ற நினைப்போடுதான் நானும் இருந்தேன். இந்த ஞானஒளி பிறந்தபிறகு, வரப்போகும் என்னவளிடம் என் கருத்தை தெரிவித்து, ஒரு குழந்தை பெற்றெடுத்து, ஒரு குழந்தையை தத்தெடுத்து, ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க விரும்புகிறேன்.  இதை மற்றவர்களும் பின்பற்றினால், மக்கள்தொகையையும் கட்டுப்படுத்தலாம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்க்கையும் கொடுக்கலாம். சிந்தியுங்கள் !!

* தினேஷ்மாயா *

வேடிக்கை பொருட்கள் இல்லை..



நேற்று நண்பர்களுடன் சென்னையில் இருக்கும் தேவி திரையரங்கம் சென்றிருந்தேன். இடைவேளையின்போது, படத்திற்கு சில திருநங்கைகளும் வந்திருந்ததை கண்டேன். அவர்களும் நம்மைப்போல், வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான திண்பண்டங்களை வாங்கிசென்றனர். ஆனால், அவர்களை மற்றவர்கள் பார்த்த பார்வை எனக்கு கோபம் வரவைத்தது. அவர்களை ஏதோ ஒரு வேற்றுகிரகவாசி போலவும், வேடிக்கைப்பொருளை பார்ப்பது போலவும், ஒரு கேவலமான பார்வையோடு நோக்கினர். எப்போதுதான் இந்த சமூகம் மாறும் என்று நொந்துக்கொண்டேன். அவர்களும் நம்மைப்போன்ற சாமானியர்கள்தான். அவர்களை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்காமல் இருங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் கைம்மாறாக இருக்கும். சில பெண்களும்கூட திருநங்கைகளை கேலியாக பார்த்தனர். அனைவரும் மனிதர்கள்தான் என்பதை மறக்கவேண்டாம். தூங்கிக்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பி, அனைவரிடத்திலும் மனித்ததோடு பழகுவோம்.

* தினேஷ்மாயா *

ஆங்கில பித்தன்



                   சமீபத்தில் எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் ஒரு விவாதம் வந்தது. ஒரு கடையில் ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை தவறாக எழுதியிருந்தார்கள். அதற்கு அவர் கேலியாக சிரித்தார். ஆங்கில வார்த்தையை தவறாக எழுதியிருக்கிறார்கள் பாருங்கள் என்று சொன்னார்.  நான் சொன்னேன், இதில் என்ன தவறு இருக்கிறதென்று. அதற்கு அவர் என்னிடம் கேட்டார், சரியாக ஆங்கில வார்த்தையை எழுத தெரிந்தால் மட்டுமே பயன்படுத்தலாமே, ஏன் தவறாக உச்சரிக்க வேண்டும், ஏன் தவறாக எழுத வேண்டும் என்றார். நான் சொன்னேன், ஆங்கிலம் என்பது நமது பூர்வீக மொழி அல்ல. அந்நியர்களின் மொழி, அவர்கள் கற்றுத்தந்த மொழி. அதை நாம் சரியாக பின்பற்றியே ஆகவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. இங்கு பலருக்கு தங்கள் தாய்மொழியையே சரியாக எழுதவும், படிக்கவும் தெரியாது. தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை எத்தனைப்பேர் சரியாக உச்சரிக்கிறோம் சொல்லுங்கள். ஆங்கிலேயர்கள், அவர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ் சொற்களையும், நமது ஊர் பேர்களையும் மாற்றிக்கொண்டார்கள். அப்படியிருக்க, இந்தியர்கள் நாம், அவர்களின் மொழியை நமது வசதிக்கேற்ப மாற்றினால் அது ஒன்றும் கொலைக்குற்றம் ஆகாது. ஆனாலும், எந்த மொழியை கற்கும்போதும், கசடற கற்க வேண்டும் என்றேன்...

* தினேஷ்மாயா *

பூமியில் சொர்க்கம்



சொல்லாமலே புரிந்துக்கொள்ளும் ஓர் உன்னதமான உறவு உனக்கு கிடைத்தால், பூமியிலேயே சொர்க்கம் காணலாம்..

* தினேஷ்மாயா *

சிறகு முளைத்த கவிதை


உன் கண்களை பார்த்த நொடி,

என் கவிதைகள் அனைத்திற்கும்

சிறகுகள் பிறக்கிறது..

உன்னைத்தேடி பறக்க !

* தினேஷ்மாயா *


மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை



மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்...
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
எதனில் வீழ்ந்தால்... ஆஆஆ...
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

படம் : ஓ காதல் கண்மணி
இசை : ஏ ஆர் ரஹ்மான்
பாடியவர்கள் : சித்ரா & ஏ ஆர் ரஹ்மான்

* தினேஷ்மாயா *

தள்ளி நில்..

Friday, May 15, 2015


தள்ளி நில்..

பூக்கள் உன்னை பறித்துவிடப் போகிறது..

* தினேஷ்மாயா *

அனுமதி தேவையில்லை

Wednesday, May 06, 2015



உனக்கான வாழ்க்கையை வாழ

நீ

யாரிடமும் அனுமதி கேட்கத்தேவையில்லை..

* தினேஷ்மாயா *


என்னாவேனோ ?



உன் கண்களை பார்த்தாலே

காணாமல் போய்விடுகிறேன்..

களவியின்பொழுது என்னாவேனோ ?

* தினேஷ்மாயா *

மரக்கூடு


மரத்தில் கூடு கட்டி

பறவைகள் மட்டும்தான் வாழனுமா, என்ன ?

வா ..

நாமும் வாழ்ந்து பார்ப்போம் !

* தினேஷ்மாயா *