உன் மென்மை...

Saturday, May 15, 2010



கண்ணே !
உன்னைக் கண்ட
பின்னர்தான்
மயிலிறகையே
தொட்டுப் பார்க்கும்
ஆர்வம் எழுந்தது எனக்கு....
உன்னை விடவும்
அது மென்மையானதா
என்று !!!

அன்புடன் -


தினேஷ்மாயா 

என் நண்பனுக்கு...

Friday, May 14, 2010









நண்பனே !

பத்து மாதம்
என்தாய் உன்னை
சுமந்து பெறவில்லை
என்றாலும், நீயும் என்
உடன் பிறப்பே !


ஒன்பது கிரகங்களைப்
போல நமது
வாழ்க்கைப் பாதை
வெவ்வேறு திசையில்
இருந்தாலும் -
சூரியனைப்போல
நம் நட்பை சுற்றியே
நம் வாழ்க்கை இருக்கும் !

எட்டாம் வண்ணமாய்
வானவில்லின் புதிய
வண்ணம் போல
 நம் நட்பு
ஜொலிக்கும் !


ஏழு பிறவி
எடுத்துவந்து, நான்
உன்னை காண
இறைவனிடம்
வரம் வேண்டுகிறேன் !


ஆறு வகை சுவைகள்
ஒன்றாக சேர்ந்தாலும்,
அது நம் நட்பை
போல இனிக்காது !


ஐந்து பொறிகளை
வெல்லும் சக்தி
இறைவனுக்கு அடுத்து
நமது நட்பிற்கு
மட்டுமே உண்டு !


நான்கு திசைகளையும்
கடந்து சென்றாலும்
புதிதாய் ஒரு
திசையில் என் நட்பு
உன்னை வந்துச்
சரணடையும் !

மூன்றாம்  பிறை போன்று
தேய்வது என்பது
நமது நட்பில்
என்றுமே கிடையாது !

(+2) இரண்டில் நான் ( +2 Standard )
புத்தகத்தில் அதிகம்
கற்றதைவிட, உன்
நட்பில்தான் அதிகம்
கற்றுக் கொண்டேன் !

ஒன்று மட்டும் உன்னிடம்
சொல்ல விரும்புகிறேன்..
உன்னுடைய இந்த பிரிவு
எனக்கு பிரிவல்ல..
பிரிவு என்பது
நம் நட்பில்
என்றுமே இல்லை...
அப்படி இருந்தால்
அது நட்பே இல்லை..

நண்பா !
பிரிவு நிச்சயமானதுதான்..
ஆனால்,
உன்னுடைய நினைவுகள்
இருக்கும்வரை அந்த
பிரிவு கூட
நிரந்தரமானதல்ல..  !  !  !




நான் +2 படித்து முடிக்கும்போது, என் பள்ளிவாழ்க்கையின் கடைசி நாளில் என் வகுப்பு நண்பர்களுக்கு நான் எழுதி சமர்ப்பித்த கவிதை இது..
இது 4 வருடங்கள் முன்னர் எழுதியது, என்றாலும் இன்னும் என் நினைவில் இருக்கிறது இந்த கவிதையும் என் பள்ளி நாட்களின் பசுமையான நினைவுகளும்.....

அன்புடன் -


தினேஷ்மாயா 

காதல் பரிசு..

Thursday, May 13, 2010


நான் அவளுக்கு
அளித்த
காதல்பரிசு -
என் இதயமும்
என் உயிரும்
என் கனவும்...

அவள் எனக்கு
அளித்த
காதல்பரிசு -
வேதனை
சோகம்
மரணம்...

அன்புடன் -
தினேஷ்மாயா

எதிர்பார்ப்பு..


நான் உன்னிடம்
காதலையோ
நட்பையோ
எதிர்பார்க்கவில்லையடி..

இவை எல்லாவற்றையும் தாண்டிய
உன்னதமான , புனிதமான ,
ஓர் உணர்வுபூர்வமான
இணைப்பைதான்
வேண்டுகிறேன்....

அன்புடன் -
தினேஷ்மாயா

பிரிவு...



பிரிவு...
இதைப் பற்றி
கவிதை வேண்டுமா..
இல்லை இதை
உணர வேண்டுமா..

கவிதை வேண்டுமானால்
இதை படித்துக்கொள்..

உணர வேண்டுமானால்
எனை நினைத்துக்கொள்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

நம்பிக்கை துரோகம்...



இவ்வுலகில் மிகப்பெரிய
நம்பிக்கை துரோகி
என் இதயம் தான்...

இதுநாள் வரை
அது எனக்காகவே
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று நினைத்து இருந்தேன்..

இன்றுதான் தெரிந்தது
அது உனக்காகத்தான்
துடித்துக் கொண்டிருந்தது என்று.....


அன்புடன் -


தினேஷ்மாயா 

மறதி - மரணம் உறுதி....




ஒருநாள்
உன்னை
மறந்திருப்பேன்...

நிச்சயம் -

அன்று
நான்
இறந்திருப்பேன்...


அன்புடன் -

தினேஷ்மாயா 

உரிமை..



தோழனே...
நான் உன்னுடன்
பழகிய அந்த
பசுமையான நினைவுகளை,
என்னிடம் இருந்து
பறித்துச் செல்லும்
உரிமை அந்த -
மரணத்திற்கும் இல்லை...........


அன்புடன் -


தினேஷ்மாயா