மழைக்காலம்....

Sunday, January 31, 2010



அன்றொருநாள் மழையில்
ஒற்றைக்குடையில்
நாமிருவரும் சென்றோம்....

குடையில் இடமில்லாமல்
நான் மழையில்
நனைந்துக்கொண்டிருப்பதை
நீ அறிந்து....

எனக்கு மழையில்
நனைவதுதான்
ரொம்ப பிடிக்கும்
என்று குடையை
வீசி எறிந்தாயே...

அப்போதுதான் உணர்ந்தேன்..
என்னைவிட நீதான்
அதிகமாய் காதலிக்கிறாய்
என்று...




காதலுடன் -

தினேஷ்மாயா

என்னை பாதித்தவைகள்....

நான் எடுத்துக் கொண்டிருக்கும் குறும்படத்திற்காக இணையதளத்தில் உலா வந்தபோது என் மனதை மிகவும் பாதித்த ஒரு புகைப்படத்தை
உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்....




உலகில் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை மனித இனம் நிச்சயம் பல கோடி ஆண்டுகள் நிலைத்து இருக்கும்....



அன்புடன் -

தினேஷ்மாயா

வாழ்க்கை சொல்லித்தந்த பாடம்.....

Thursday, January 28, 2010



அனைவர்க்கும் வணக்கம்...

உலகை மாற்ற அனைவரும் விரும்புகின்றனர்..
ஆனால் தங்களை யாரும் மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை...

நானும் இவ்வுலகை மாற்ற நினைத்து,முடியாமல் தவித்தபோது,
ஒவ்வொரு மனிதனும் தன்னை மாற்றிக்கொண்டால் இவ்வுலகம் தானாகவே மாறிவிடும் என்ற உண்மையை உணர்ந்துக் கொண்டேன்.

நான் என்னை மாற்றிக்கொண்டப்பின் இவ்வுலகம் எனக்கு புதிதாய் தெரிந்தது.
உலகை மாற்ற நினைக்கும் அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் இது சமர்ப்பணம்.

இங்கே என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இதை அனைவரும் பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பாக அமையும்...


  • சூரிய உதயத்திற்கு முன் கண் விழி.


  • இறைவனை தொழு. அது உன் கடமை.


  • நன்றி மறவாமல் இரு.


  • விட்டுக்கொடுத்து வாழ்.


  • அனைவரையும் நேசி.


  • உடலினை உறுதி செய். - பாரதி சொன்னது.


  • பொய் பேசுவதை தவிர்.


  • எப்பேர்பட்ட துயரமானலும் கவலைப்படாதே.


  • கேட்டத்தையெல்லாம் நம்பிவிடாதே.


  • நம்பியதையெல்லாம் சொல்லிவிடாதே.


  • சோம்பலை விட்டொழி.


  • தினமும் ஒரு மணிநேரமாவது இசை கேள்.


  • சொன்ன சொல் தவறாதே.


  • இயற்கையை நேசி.


  • அதிகம் பேசாதே.


  • எப்போதும் பொறுமையாய் இரு.


  • பிறர் பொருளுக்கு ஆசை படாதே.


  • அனைவரும் சமம் என்பதை மறக்காதே.


  • பிறர்க்கு உதவி செய்ய கலெக்டராகவோ, மந்திரியாகவோ இருக்கவேண்டும் என்பதல்ல.
    நல்ல மனிதனாய் இருந்தால் போதும்.


  • எதிலும் உண்மையாய் இரு.


  • சோதனைகள்தான் உன்னை உறுதியான மனிதனாக்கும்.


  • தோல்வியைக் கண்டு அஞ்சாதே.


  • மனிதநேயம் இல்லாதவன் மனிதனே இல்லை.


  • அதிகமாய் உண்ணாதே. எப்போது பாதி வயிறுமட்டுமே உண்ண வேண்டும்.


  • தியானம் பழகு. அது நீ யார் என்பதை கண்டுபிடிக்க உதவும்.


  • தூங்கும்போதும் விழிப்புணர்வுடன் இரு.


  • பிறர் உழைப்பை நம்பி இருக்காதே.


  • உனக்குத் தெரிந்த நல்ல செய்திகளை பிறர்க்கும் தெரிவி.


  • பிறர்க்கு வழி்காட்டியாய் இரு.


  • தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்.


  • மண், பொன், பெண் இவைமீதான ஆசைகளை அழித்துவிடு, இல்லையேல் அந்த ஆசைகள் உன்னை அழித்துவிடும்.


  • நேரத்தை வீணாக்காதே.


  • உன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளாதே.


  • தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக்கொள்.


  • எவர்க்கும் சுமையாய் இருக்காதே.


  • உன் வேலையை நீயே செய்.


  • எதையும் இலவசமாக பெறாதே.


  • இன்றைய வேலையை இன்றே செய்.


  • மற்றவரை மகிழ்வித்து அதில் நீ மகிழ்ச்சி காண்.


  • செய்வன திருந்த செய்.


  • தினமும் உடற்பயிற்சி செய்.


  • அதிகம் தண்ணீர் பருகு.


  • சூரிய ஒளி உடலில்படும்படி செயல்படு.


  • இயன்றவரை செயற்கை மருந்துகளை தவிர்.


  • உன்னால் முடியாதது எதுவும் இல்லையென்பதை உணர்.


  • இழப்பதற்கு உயிரை தவிர எதுவும் இல்லை. வெல்ல உலகமே உள்ளது.


  • எல்லாம் மாயை.


  • எதுவும் உனக்கு சொந்தமில்லை.


  • வாய்மையே வெல்லும்.


  • கால் போன போக்கில் போகாதே. மனதை அடக்கி பழகு.


  • பகையை வளர்க்காதே.


  • கர்வத்தை மறந்துவிட்டு, தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்.


  • மரணம் என்பது ஒருமுறைதான். எதற்கும் பயப்படாதே.


  • நீ இருக்குமிடத்தில் இல்லாத ஒருவரைப்பற்றி ஒருபோதும் பேசாதே.


  • எதையும் வெளிப்படையாய் பேசிவிடு.


  • எந்த உயிர்க்கும் தீங்கு விளைவிக்காதே.


  • சுத்தமாய் இரு.


  • ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய். அப்போதுதான் அந்த வேலை விரைவிலும், நல்ல முறையிலும் முடியும்.


  • கலைஞனை ஊக்கப்படுத்து.


  • வதந்தியை பரப்பாதே.


  • வதந்தியை நம்பாதே.


  • தாய் தந்தையர் சொல்படி நட.


  • எந்த வேலையை செய்யும் முன்னர் யோசித்து செய்.


  • எந்த விஷயத்தையும் பரந்த மனத்துடன் பார்.


  • பிறரின் துன்பங்களை நீக்க முயற்சி செய்.


  • எப்போதும் மனசை லேசாக வைத்திரு.


  • உன் மனதிற்க்கு சரியென பட்டதை செய். அதற்க்குமுன் உன் மனதை நல்வழிப்படுத்து.



    இன்னமும் சொல்கிறேன்...ஆனால் அப்புறம் சொல்கிறேன்... :)

    இதை எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் அதை பின்பற்றுவது சுலபமல்ல..

    மேலே நான் சொல்லியதை இன்றுவரை என் வாழ்க்கையில் என்னால் முயன்றவரை பின்பற்றிவருகிறேன்.

    இவைகளை கற்றுக்கொள்ள நான் தந்த விலை மிக உயர்ந்தது. எத்தனையோ வலிகள், தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள், இழிவுப்பேச்சுகள், புறக்கணிப்புகள், கண்ணீர் துளிகள், துயரங்கள்.... இன்னும் பல..

    என் அனுபவத்தின் மூலம் பிறரை நல்வழிப்படுத்த நினைக்கிறேன்.

    நீங்கள் பிறர்க்கு நல்லவராக தெரிய வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்களுக்கு நல்லவராக இருங்கள்.....

    ...வாழ்க வளமுடன்....


    என்றும் அன்புடன் -

    தினேஷ்மாயா

    Ph : +919791155982
    Email : mddinesh@yahoo.co.in
  • கவிதை கிறுக்கல்கள்....



  • மீண்டும் ஒருமுறை
    அவளை நேரில்
    பார்க்கும் தைரியம்
    எனக்கு இல்லை...
    ஆனால் அவளோ
    ஏதோ ஒர்வடிவில்
    என் கண்முன்
    தோன்றிகொண்டே இருக்கிறாள்...
    அவளைத்தான் மறக்க முடியவில்லை...
    அவள் ஏற்படுத்திய வலியையாவது
    மறக்கலாமென்றால்........

    இந்த பெண்களே இப்படிதானோ?










  • நான் எழுதிய
    புதிய கவிதைப் புத்தகம்..
    நாங்கள் இருவரும்
    பார்த்துக் கொண்ட
    பார்வைகளால்
    நிரம்பியிருக்கிறது...




  • ஒரு மாலைப் பொழுதில்...
    சொல்ல வேண்டிய காதலை
    சொல்லாமலும்...
    சொல்லக் கூடாத நன்றியை
    சொல்லியும்...
    நானும் அவளும்
    பிரிந்து சென்றோம்
    வலியுடனும் !
    காதலுடனும் !




  • உன் கண்களை
    நான் படித்திருக்கிறேன்..
    என் மனதை
    நீ படித்திருக்கிறாய்..
    இருப்பினும், நம்
    காதலை சொல்ல
    இருவரும் ஏன்
    இன்னமும் தயங்குகிறோம்....




  • உன்னுள் நான்
    இருக்கிறேன் என்பதை
    உன் செயல்கள்
    எனக்கு புரியவைத்துவிட்டது..
    ஆனால் உன்
    மௌனம்தான் என்னை
    தடுமாற்றம் கொள்ளச்செய்கிறது...




  • உனக்கு தெரியுமா...
    நண்பர்களோடு சேர்ந்து
    நாம் விளையாடியபோது
    நீ எழுதித்தந்த
    துண்டுச் சீட்டுக்களை
    இன்னமும் நான்
    பத்திரமாக வைத்துள்ளேன்...



  • ஊரே உறங்கிக்கொண்டிருக்கையில்
    நாமிருவர் மட்டும்
    இரவு முழுதும்
    நம் எண்ணங்களை
    பகிர்ந்துக் கொண்டிருந்தோம்..
    அன்று தொலைத்தவந்தான்...
    இன்னமும் கிடைக்கவில்லை
    எனக்கு-
    என் உறக்கம்...



  • முட்களின் மேல்
    ரோஜா இருப்பதைப்போல
    எனக்குள்ளும் காதல்
    தோன்றியது...
    உன்னை பார்த்த பின்பு.

    ரோஜாவின் கீழ்
    முட்களும் இருப்பதைப்போல
    உனக்குள்ளும் நடிப்பு
    தோன்றியது...

    என்னை உண்மையாய்
    காதலித்துவிட்டு-
    ஒரு நொடியில்
    என்னை காதலிக்கவில்லை
    என்று கூறினாயே....

    என்னை தனியாய்
    விட்டுச்செல்ல
    உனக்கு எப்படி
    மனம் வந்தது...?



  • எனக்கு
    கோர்வையாய்
    கவிதை எழுத
    தெரியாது-

    உன்னை
    உலக அழகி
    என்று வர்ணிக்க
    தெரியாது-

    பிறர்போல்
    வண்டியில் வைத்து
    சுற்றி வரத்
    தெரியாது-

    உன்னையே
    பின் தொடர்ந்து
    அலைந்துத் திரிய
    தெரியாது-

    காதலித்தால்
    இவையெல்லாம்
    செய்யனும் என்று
    சத்தியமாக எனக்கு
    தெரியாது..

    எனக்கு தெரிந்ததெல்லாம்....

    உன்னை
    என் உயிர்போல்
    வைத்து, காக்க
    தெரியும்-

    உன்னுடைய
    மனதின் ஆசையை
    புரிந்து, நடக்க
    தெரியும்-

    உன்னையே
    எண்ணிக் கொண்டு
    உறங்காமல் இருக்க
    தெரியும்-

    இவ்வுலகில்
    நான் வாழும்வரை
    உன்னைமட்டுமே நினைக்க
    தெரியும்-

    உன்னை
    மனதில் வைத்து
    இதுபோல் கொஞ்சம்
    கவிதைகளை கிறுக்க
    தெரியும்-

    நீ பிரிந்தால்
    உனக்கு முன்னர்
    இறக்கத் தெரியுமடி
    என் காதலியே !



  • 433 நாட்கள்
    நாம் ஒன்றாக
    இருந்தோம்..

    எனை பிரியும்
    எண்ணம் உனக்கு
    முன்னரே இருந்திருந்தால்
    முதல்நாளே சொல்லியிருக்கலாமே..
    நான் காதலை
    வளர்த்திருக்க மாட்டேனே.

    இப்போது நான்
    என் காதலை
    உனக்கு தந்துவிட்டேன்..

    கைம்மாறாக வலியையும்
    வேதனையையும் நீ
    எனக்கு தந்துவிட்டயடி..



  • என்றாவதொரு நாள்
    நீ என் வலைப்பக்கத்தை
    படிப்பாய் என்னும்
    பேராசையில்தான்
    நான் என்
    நினைவுகளை இங்கே
    பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன்..

    இதைப் படிக்கும்போது
    தயவுசெய்து கண்ணீர் வடிக்காதே..

    நீயாகவே காதலிப்பதாய் சொன்னாய்..
    நீயாகவே காதலிக்கவில்லையென்றும் சொன்னாய்..

    நீ பிரிந்தபோது
    நான் வடித்த கண்ணீரைவிட
    நீ ஒன்றும்
    அதிகமாய் அழுதிருக்க மாட்டாய்..

    என் நினைவுகளை
    படித்துப் பார்க்கும்
    உரிமை மட்டும்தான்
    உனக்கு உண்டு..

    நானும் ஒருகணம்
    நினைத்துப் பார்த்தேன்..

    நீ என்னைவிட்டு
    பிரிந்து சென்றபின்
    என் வாழ்க்கை
    கேள்விகுறியகிவிடுமோ என்று..

    என் நண்பர்கள்
    சொன்னார்கள்-
    என்னை கைப்பிடிக்கும்
    பாக்கியம் உனக்குத்தான்
    இல்லையென்று..
    அது வெறும்
    கண்துடைப்பு என்றுதான்
    நான் எடுத்துக்கொண்டேன்..

    உன் வாழ்க்கையை
    நீ அமைத்துக் கொண்டாய்..
    ஒரு வேளை
    என் மனதுக்குப்பிடித்த
    பெண்ணை நான்
    காண நேர்ந்தால்?

    இப்படி ஒரு
    கேள்வி என்னுள்
    எழுந்தது..

    ஆனால் மீண்டும்
    இன்னொருமுறை வலியைதாங்கும்
    தைரியம் எனக்கில்லை..

    அவளும் உன்னைப்போல்
    சொல்லிவிட்டால்......!?!


  • உண்மையாக உன்னை
    நேசித்தது தவறா?



  • நீ என்னை
    பிரிந்து சென்றதிலும்
    ஒரு சிறிய
    நன்மை இருக்கிறது..
    உலகத்தை பற்றி
    எனக்கு நன்றாக
    புரியவைத்துவிட்டாயடி....



  • உண்மை காதலை
    உதட்டில் மறைத்து
    போலியாய் புன்னகைக்கும்
    பேதை பெண்ணே..
    கடைசியாய் ஒரு
    வேண்டுகோள்..

    எனக்கும் சேர்த்து
    நீ வாழ்ந்துவிடு...

    உனக்கும் சேர்த்து
    நான் இறந்த்துவிடுகிறேன்....



    ...சமர்ப்பணம்...

    என்னவளுக்கும்....
    அவள் நினைவுகளுக்கும்....





    என்றும் அன்புடன் -

    தினேஷ்மாயா

     Ph: 9791155982
    Email : mddinesh@yahoo.co.in
  •